முன்விரோதம் காரணமாக மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி… 2 பேர் பலி

மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி மின்சாரம் பாய்ச்ச முயன்றவர் மின்சாரம் பாய்ந்து பலி காப்பாற்ற ஓடிவந்தவரும் மின்சாரம் பாய்ந்து பலி முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி – விசாரணை முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சிக் கொல்ல முயற்சி சிறிய இரும்பு ராடை மின்சார ஒயரில் சுற்றி எடுத்துச் சென்று கொல்ல முயற்சி மாட்டுக் கொட்டகையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தவரை கொல்ல முயற்சி தூங்கிக் கொண்டிருந்த சரண்ராஜ் சத்தம் போட்டதால் காப்பாற்ற வந்த ரேணுகோபால் … Read more

அரியலூர் – கைகாட்டி விலக்கில் பேருந்துகள் நின்று செல்லக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே பேருந்துகள் நிறுத்தத்தில் நின்று செல்லக் கோரி பள்ளி மாணவர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வி.கைகாட்டி அருகேயுள்ள பெரியநாகலூர், சின்னநாகலூர், புள்ளிகுளம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள், அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள மாதிரி பள்ளியில் பயின்று வருகின்றனர். இவர்கள் தினமும் பெரியநாகலூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மூலம் பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இந்த நிலையில், பெரியநாகலூர் பேருந்து நிறுத்தத்தில் இன்று … Read more

சென்னை: வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூத்த தம்பதிக்கு விடிந்ததும் காத்திருந்த அதிர்ச்சி

வீட்டில் ஆட்கள் இருந்தபோதே 70 சவரன் தங்க நகை, 1 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சென்னை வேளச்சேரி, வீனஸ் காலனி, 2வது பிரிவு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (64). இவர், தனது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு, இருவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இன்று அதிகாலை, குழாய் வழியாக ஏறி வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 70 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் … Read more

Russia-Ukraine crisis Live: உக்ரைனில் தவிக்கும் இந்தியர்கள்: பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆலோசனை

Go to Live Updates ரஷ்யாவில் இருந்து எரிபொருள் மற்றும் எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. விற்பனையை நிறுத்திய பிரபல நிறுவனங்கள் மெக்டோனல்டு, ஸ்டார்பக்ஸ், கொக்கக் கோலா ஆகிய நிறுவனங்கள் ரஷ்யாவில் விற்பனையை நிறுத்திவிட்டன. ரஷ்யாவுக்கு எதிராக ஐ.நா. சுற்றுலா அமைப்பு உக்ரைன் மீது ரஷ்யா … Read more

டாஸ்மாக் வருமானம் தான்., திராவிட மாடல் வளர்ச்சியா? தமிழக முதல்வரை விமர்சித்த அண்ணமாலை.!

தமிழக அரசிடம் தொலைநோக்குத் திட்டங்கள் எதுவுமில்லாமல் தான், டாஸ்மாக் மதுபானங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக, பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்ததாவது, “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி இதுவரை மேகதாது அணை விவகாரம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கக்கூடிய திமுக, கர்நாடக காங்கிரஸ் … Read more

மருத்துவமனை முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருட்டு… வெளியான சிசிடிவி காட்சிகள்!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மருத்துவமனை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னாம்பேட்டையைச் சேர்ந்த இத்ரீஸ் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இரவில் வந்த மர்ம நபர் ஒருவர், இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றார். இதுகுறித்து, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுள்ளனர். Source link

இந்தியாவிலேயே அதிகமாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை: 3,257 பேர் சிறப்பு பிஎட் பட்டம் பெற்றுள்ளனர்

சென்னை: இந்தியாவிலேயே அதிகமாக, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2,631 மாற்றுத் திறனாளிகள் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 81 பட்டப் படிப்புகள், 21 திறன் மேம்பாட்டுப் படிப்புகள் ஆகிய 130 கல்விசார் பாடவகைப் பிரிவுகளைத் தொலைதூரக் கல்விஅடிப்படையில் வழங்கி வருகிறது. இதில்50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கல்வி பயின்று வருகின்றனர். அதன்படி, பல்கலைக்கழகத்தில் 2003-ம் ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்கள் பல்வேறு படிப்பு களைப் படித்து வருகின்றனர். இதற்கிடையே, பல்கலைக்கழகத்தில் பயிலும் மாற்றுத் திறனாளி … Read more

திருவண்ணாமலை: மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சி – 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் சொரகொளத்தூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற இருவர் உயிரிழந்தனர்.    சரண்ராஜ் என்பவரை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற ஏழுமலை என்பவரும், சரண்ராஜை காப்பாற்ற வந்த ரேணு கோபால் என்பவரும் உயிரிழந்தனர். சரண்ராஜ் மீதான முன்விரோதத்தால் அவரை மின்சாரம் பாய்ச்சி ஏழுமலை கொல்ல முயன்ற போது இச்சம்பவம் நடந்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM