”தமிழக காவல்துறையில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது” – டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு

தமிழக காவல்துறையில் பெண்களின் பங்கு மகத்தானது என்று டிஜிபி சைலேந்திர பாபு பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக ஐபிஎஸ் அதிகாரிகளின் மனைவியர் சங்கத்தினர் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்திருந்த நடமாடும் மருத்துவ முகாமை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நடமாடும் மருத்துவ முகாமினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் டிஜிபி சைலேந்திரபாபு … Read more

நல்லா பாருங்க… இது சேப்பாக்கம் இல்லை’ நம்ம தல தோனிக்கு பெரிய விசில் அடித்த சூரத்!

CSK Team Entry In surat For Begin Training : 15-ஐபிஎல் தொடருக்கான பயிற்சிக்காக சூரத் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ந் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இதுவரை 8 அணிகள் பங்கேற்று வந்த இந்த தொடரில் குஜராத் மற்றும் லக்னோ என 2 புதிய அணிகள் இணைந்து தற்போது அணிகளின் எண்ணிக்கை 10-ஆக உயர்ந்துள்ளது. இந்த 10 அணிகளும் … Read more

வளர்மதிக்கு கேக் ஊட்டிய எடப்பாடி.. மகளிர் தின ஸ்பெஷல் வீடியோ வைரல்.!

இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மகளிர் தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இருவரும் இணைந்து கேக் வெட்டி அதிமுக பெண் நிர்வாகிகளுக்கு கேக் ஊட்டி விட்டனர். தற்போது இது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் … Read more

மேகதாது திட்டத்தை தடுக்க சட்ட நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ளும் – அமைச்சர் துரைமுருகன்

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தடுக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து நிலைமைக்கேற்றவாறு முடிவெடுக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தமிழ்நாட்டிற்கு கிடைக்கவேண்டிய நீரைத் தடுக்கும் முயற்சி என்றும், இது தமிழக விவசாயிகளின் நலனை பெரிதும் பாதிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு அதன் நிதி நிலை அறிக்கையில், மேகதாது அணை திட்டத்திற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது … Read more

'உங்கள் பணியைப் பார்த்து தான் எனக்கு இந்த வேகம்' – ஷைலஜா டீச்சரை பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அண்ணா அறிவாலயத்தில், திமுக மகளிரணி சார்பில் உலக மகளிர் நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், திமுக மக்களவை எம்பி கனிமொழியுடன், கேரளாவின் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இதேவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் முக ஸ்டாலின், சைலஜா டீச்சரை வெகுவாக பாராட்டி பேசினார். அதில், “மகளிர் சகோதரிகள் முன்மாதிரியாக கொள்ள வேண்டிய ஷைலஜா டீச்சர் இந்த விழாவிற்கு வந்திருக்கிறார்கள். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் பிறந்த ஷைலஜா டீச்சர், பொதுவுடைமைக் கருத்தியலால் … Read more

"புனித வெள்ளியன்று டாஸ்மாக்கை மூட வேண்டும்" – தமிழக முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் கடிதம்

இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தில் அரசு மதுபான கடைகளை மூட உத்தரவிடும்படி கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில், புனித வெள்ளி வரும் ஏப்ரல் மாதம்15 ஆம் தேதி அனுசரிக்கப்படவுள்ளதாகவும், இந்நாளில் கிறிஸ்தவர்கள் உண்ணா நோன்பிருந்தும், ரத்த தானம் செய்தும் இயேசு கிறிஸ்துவுக்கு அஞ்சலி செலுத்தி வருவதாக கூறியுள்ளார். எனவே, இயேசுவின் மகத்தான தியாகத்தை அங்கீகரிக்கும் வகையில் புனித வெள்ளியன்று டாஸ்மாக் கடைகளை மூட … Read more

திமுக ஒதுக்கியது 16; கிடைத்தது 8: பொறுமை காக்க வி.சி.க முடிவு

திமுக கூட்டணியில் உள்ள விசிகவுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்ட 16 பதவிகளில் திமுகவினரே போட்டியிட்டு கைப்பற்றியது போக மீதி 8 பதவிகள் மட்டுமே விசிகவுக்கு கிடைத்துள்ளது. இருப்பினும், விசிக பொறுமை காக்க முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் அரசியல் கட்சியாக அறியப்படும் திருமாவளவன் தலைமையிலான விசிக கடந்த 2019 ஆண்டு மக்களவைத் தேர்தல் முதலே திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு அளிக்கப்பட்ட 2 மக்களவைத்தொகுதிகளில் அக்கட்சியின் தலைவர் … Read more

கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களுக்கு சிறப்பு பரிசுகளை வழங்கினார் மேயர்.!

மகளிர் தினத்தை முன்னிட்டு கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய பெண் மருத்துவர்களின் சேவைகளை பாராட்டி சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பரிசு மற்றும் கேடையங்களை வழங்கினார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர்.பிரியா அவர்கள் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கலையரங்கில் மகளிர் தின விழாவினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் கட்டட வளாகத்தில் இன்று சர்வதேச மகளிர் தின விழா நடைபெற்றது.  … Read more

எஸ்கார்ட் வாகனங்களுடன் அழைத்துவரப்பட்ட முதல்நிலை பெண் காவலர்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த காவல்துறை

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை செம்மஞ்சேரியயைச் சேர்ந்த சரிதா என்ற முதல்நிலை காவலர், அவரது வீட்டில் இருந்து காவல் நிலையம் வரை காவல்துறை எஸ்கார்ட் வாகனங்கள் புடைசூழ அழைத்துவரப்பட்டு கெளரவிக்கப்பட்டார். செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சரிதா, தன் இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று வீட்டில் இருந்து கிளம்பிய சரிதாவின் இரு சக்கர வாகனத்தின் முன்னும் பின்னும் 2 எஸ்கார்ட் வாகனங்கள் சைரன் ஒலி எழுப்பியபடி காவல் நிலையம் … Read more