மகளிர் தினத்தில் பாலிய சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம் – சீமான்..!

மகளிர் தினத்தில் பாலிய சமத்துவத்தை நிலைநாட்டவும், பெண்களுக்குரிய உரிமைகளை நிலைபெறச்செய்யவும் உறுதியேற்போம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘மங்கையராகப் பிறப்பதற்கே மாதவம் புரிந்திட வேண்டுமம்மா!’ என்று மகளிரைப் போற்றிக் கொண்டாடுகிறார் ஐயா கவிமணி தேசிய விநாயகம். ‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்று பெண்களின் பேராண்மையைப் போற்றித்தொழுகிறார் பெரும்பாவலர் சுப்பிரமணியப் … Read more

சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு <!– சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி திடீரென தீப்பற்றி எரிந்தத… –>

புது டெல்லியில் இருந்து கோயம்புத்தூருக்கு மருத்துவ உபகரணங்களை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி திடீரென தீ பற்றி எரிந்தது. ஆவாரம்பாளையத்தில், சாலையோரம் நின்ற லாரியின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டதால் அதன் முன்புறம் தீ பற்றி எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் நெருப்பை கட்டுப்படுத்துவதற்குள் லாரியின் முன்புறம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கன்டெய்னருக்கு நெருப்பு பரவாததால், மருத்துவ உபகரணங்கள் தப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.     Source link

”தலைமைக்கு அதிமுகவினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” – ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

மதுரை: “அதிமுக, தலைமைக்கு கட்சியினர் அனைவரும் கட்டுப்பட வேண்டும்” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து முன்னாள் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறுகையில் “எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட அதிமுக பல்வேறு சவால்களைத் தாண்டி செயல்படுகிறது. திமுகவின் அடக்குமுறையைத் தாண்டி அதிமுக செயல்படுகிறது. அதிமுக மட்டுமே தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது. அதிமுகவின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கும் முயற்சி நடைபெறுகிறது. இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரும் அதிமுகவின் பாதுகாப்பு கவசங்களாக திகழ்கிறார்கள். 50 ஆண்டுகளாக அரசியல் … Read more

மறுக்கும் திமுக நகராட்சி தலைவர்; ‘டெட்லைன்’ கொடுத்த தங்கத்தமிழ்செல்வன்-தேனியில் பரபரப்பு

கட்சி கட்டுப்பாட்டை மீறி தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கவுன்சிலர் ரேணு பிரியா ராஜினாமா செய்ய மாலை 5 மணி வரை கொடுக்கப்பட்ட “டெட் லைன்” 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தங்கத்தமிழ்செல்வன் கூறியுள்ளார். தேனி-அல்லிநகரம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 19-வார்டு களையும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ கட்சி இரண்டு வார்டுகளையும் அமமுக இரண்டு இரண்டு வார்டுகளையும், என அதிமுக 7 வார்டுகளிலும் … Read more

மதுரை சிறுமி மரணம்; 8 பேர் கைது: நடந்தது என்ன? போலீஸ் விளக்கம்

Police explanation on Madurai minor girl death case: மதுரையில் 17 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு போதை மருந்து கொடுக்கப்பட்டது பற்றிய ஊகங்கள் வெளிவந்ததை அடுத்து, மதுரை ஊரக எஸ்பி வி பாஸ்கரன் அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். மேலும் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை அல்லது போதைப்பொருள் கொடுக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எஸ்பி பாஸ்கரன் கூறினார். மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்தைச் சேர்ந்த 17 … Read more

பெண்கள் இல்லாமல் இந்தப் பூவுலகம் இயங்காது… டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து..!

அம்மா மக்கள் முன்னின்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது, தாய்மையின் பெரும் உருவமான பெண்ணினத்தைப் போற்றி கொண்டாடுகிற உலக மகளிர் தினத்தில் மாதர்குலத்திற்கு மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.  உலகிற்கே வழிகாட்டும் வகையில்தமிழ்நாட்டு பெண்களின் உயர்வுக்காக எண்ணற்ற திட்டங்களைத் தீட்டி செயல்படுத்திய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் சரிபாதி இடங்களை பெண்களுக்காக ஒதுக்கி தந்ததால், இன்று ஆயிரக்கணக்கில் பெண் பிரதிநிதிகள் பதவிகளை அலங்கரித்து … Read more

தமிழகத்தில் தயாரித்த கனரக வாகனங்களுக்கு வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு : அரசுக்கு ரூ.52 கோடி இழப்பு <!– தமிழகத்தில் தயாரித்த கனரக வாகனங்களுக்கு வெளிமாநிலங்களில் … –>

தமிழகத்தில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்கள், வெளிமாநிலங்களில் தற்காலிக வாகன பதிவு மேற்கொள்வதால் 52கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ள போக்குவரத்து துறை ஆணையர், முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். எண்ணூர், ஓசூர் உள்ளிட்ட இடங்களில் தயாரிக்கப்படும் கனரக வாகனங்களை, வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று தற்காலிக பதிவு சான்று பெற்றுவிட்டு, பின்னர் தமிழகத்தில் நிரந்தர வாகனப் பதிவு மேற்கொள்வதாகவும், இதுபோன்று ஆண்டுக்கு சுமார் 50ஆயிரம் வாகனங்கள் வெளிமாநிலங்களில் தற்காலிக பதிவு மேற்கொள்வதால் … Read more

''அய்யோ சாமி'' – சசிகலா இணைப்பு குறித்த கேள்விக்கு நழுவிய ஓபிஎஸ்

மதுரை: ‘‘முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா அரசு இஷ்டம் போல் செயல்பட முடியாது’’ என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமல் தவிர்த்தார். அதிமுக தேனி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலா, தினகரனை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதும், அதன் நகலைகூட்டத்தில் இருந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கினர். அதேபோல், ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ.ராஜா, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதே கட்சித் தொண்டர்கள் விருப்பமாக உள்ளது என்றும், அதற்கான … Read more

'அய்யோ சாமி விட்ருங்க' – சசிகலா இணைப்பு குறித்த கேள்வியை தவிர்த்த ஓபிஎஸ்!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு ‘அய்யோ சாமி வேண்டாம்’ என ஒபிஎஸ் பதிலளித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது, சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்த கேள்விக்கு அய்யோ சாமி வேண்டாம் என பதிலளித்துள்ளார். மேலும், “முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசின் அனுமதியை பெற்றுதான் கட்ட முடியும், கேரள அரசு தன்னிச்சையாக  முடிவெடுக்க முடியாது. நாளை மகளிர் தினத்திற்காக சென்னை செல்கிறேன், பெண்களை தாயாக … Read more

உ.பி-யில் குறைந்த மெஜாரிட்டியில் பா. ஜ.க; பஞ்சாப்-ல் ஆம் ஆத்மி ஆட்சி: Exit Poll ரிசல்ட்

Elections Exit Poll Results 2022: BJP to retain UP with reduced majority; AAP to unseat Congress in Punjab: உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் திங்கள்கிழமை முடிவடைந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் உத்தரப் பிரதேசத்தில் குறைந்த பெரும்பான்மையுடன் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு தெளிவான வெற்றியைக் கணித்துள்ளன. இந்த முறை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை … Read more