பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெண்ணுக்கு வலைவீச்சு <!– பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை ஏமாற்றி கடத்திய பெ… –>

திருச்சியில் பாசமாக பழகுவது போல் நடித்து ரியல் எஸ்டேட் தொழிலதிபரை ஏமாற்றிய பெண் ஒருவர், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரை கடத்திச் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. திருவளர்ச்சோலையைச் சேர்ந்த ஜோசப் வல்லவராஜ் என்பவர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நிலையில், நண்பருடைய தோப்பையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த அவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த ஏற்கனவே திருமணமான சுந்தரி என்ற பெண் அறிமுகமாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் ஜோசப் … Read more

'ஜெயலலிதாவுக்கு இருந்த உடல்நல பாதிப்புகள்' – மருத்துவர்கள் பகிர்ந்ததாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் வெளியிட்ட தகவல்

சென்னை: ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மன அழுத்தம், வெர்டிகோ, தலைசுற்றல் பிரச்சினைகள் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தின் குறுக்கு விசாரணையில் பங்கேற்ற அப்போலோ மருத்துவர்கள் கூறினர்” என்று சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை இன்று முதல் மீண்டும் தொடங்கியது. இன்று நடந்த விசாரணைக்கு அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் உள்ளிட்ட 5 பேர் ஆஜராகியிருந்தனர். அவர்களிடம் சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் … Read more

உளுந்தூர்பேட்டை: மாசி மாத தேரோட்ட திருவிழாவில் சாய்ந்த தேர்… பக்தர்கள் அதிர்ச்சி

உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற மாசி மாத தேரோட்ட திருவிழாவின்போது தேர் சாய்ந்து கவிழ்ந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எலவனாசூர்கோட்டையில் அருள்மிகு பெரியநாயகி என்கிற அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் மயான கொள்ளை திருவிழா நடப்பது வழக்கம். திருவிழாவை தொடர்ந்து மாசி தேரோட்டமும் நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் இரண்டாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று … Read more

10 வரை படிப்பு, வாடகை வீடு… ஆட்டோ டிரைவரை தேடிவந்த மேயர் பதவி!.

தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயராக 42 வயதான கே சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுனர் பொறுப்பேற்றுள்ளார். மக்கள் மத்தியில்’ தான் இன்னும் ஒருவனாக இருக்கிறேன் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதற்காக, சரவணன் வெள்ளிக்கிழமை பதவியேற்பு விழாவிற்கு ஆட்டோவில் வந்தார். ஆளும் தி.மு.க., மாநிலத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில், காங்கிரசுக்கு ஒரு மேயர் பதவியை ஒதுக்கி, அக்கட்சியின் வேட்பாளர்களை பரிந்துரை செய்தது. பல மூத்த தலைவர்களில் ஒருவருக்கு பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், காங்கிரஸ் … Read more

திருமண விழாவிற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்.. சோகத்தை மூழ்கிய குடும்பம்..!

திருமண விழாவிற்காக பொருத்தப்பட்ட மின்விளக்கை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்.இவருக்கு உமா தேவி என்ற மனைவியும் ஏழுமலை  மகனும் உள்ளனர். இந்நிலையில், அந்த பகுதியில் திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக அங்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவன் அங்கு அலங்கரிகரிகப்பட்ட வயர்கள் மீது எதிர்பாராதவிதமாக கையை வைத்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரை மீட்ட அக்கம்பக்கதினர் அவரை … Read more

கோவில் தேரோட்டத்தில் திடீரென தேர் சாய்ந்ததால் பரபரப்பு <!– கோவில் தேரோட்டத்தில் திடீரென தேர் சாய்ந்ததால் பரபரப்பு –>

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற கோவில் தேரோட்டத்தில் தேர் திடீரென சாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எலவனாசூர்கோட்டை பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான தேரோட்டம் காலை தொடங்கியது. முக்கிய வீதிகள் வழியாக தேர் பயணித்து வந்த நிலையில், மேலப்பாளையம் சாலையில் வந்தபோது திடீரென பெய்த சாரல் மழையால் சக்கரம் வழுக்கி தேர் சாய்ந்தது. இதில் தேரில் அமர்ந்திருந்த பூசாரி சுந்தரம் என்பவர் லேசாகக் … Read more

'இது மோடி அரசின் தமிழர் விரோத நிலைப்பாடு' – மேகேதாட்டு விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

சென்னை: காவிரியில் தமிழக உரிமையை நிலைநாட்ட உடனடியாகத் தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றும், மேகேதாட்டு அணை விவகாரத்தில் இங்கும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் பாஜக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்காக 1000 கோடி ரூபாயை ஒதுக்கியிருப்பதோடு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்கிறது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோதப் போக்குக்கு ஒன்றிய … Read more

5 மணி வரை 'டெட்லைன்’ – அல்லிநகரம் திமுக நகராட்சி தலைவருக்கு தங்கத்தமிழ்செல்வன் எச்சரிக்கை

திமுக தலைமைக் கழக உத்தரவுபடி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்ட தேனி-அல்லிநகரம் நகராட்சியில் கூட்டணி தர்மத்தை மீறி நகராட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட திமுக கவுன்சிலர் ரேணு பிரியா மாலை 5 மணிக்குள் ராஜினாமா செய்யாவிட்டால் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படுவார் என தேனி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தங்கத்தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார். இதுவரை கூட்டணி கட்சி தர்மத்தை மீறி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட திமுகவின் கவுன்சிலரான ரேணுப்ரியா, மற்றும் திமுகவின் இதர கவுன்சிலர்கள், திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் … Read more

பதவி படுத்தும் பாடு… ஸ்டாலின் எச்சரித்தும் அடங்காத ‘தலை’கள்!

DMK dissenters not resigning even though stalin warned to necessary action: திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை பதவி விலக எச்சரித்துள்ள நிலையிலும், வெற்றி பெற்ற திமுகவினர் பதவி விலக மறுத்து வருகின்றனர். தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான … Read more

அந்த அரசியல் கட்சியின் அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தேன் – உயர்நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி வாக்குமூலம்.! 

திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் அதிகாரி செயல்பட்டது நிரூபணமாகி உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த வழக்கில் மேலும் ஒரு அதிர்ச்சி உண்மை வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம், டி கல்லுப்பட்டி பேரூராட்சியில் திமுகவின் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்ததை எதிர்த்து சுயேச்சை வேட்பாளர் பழனி செல்வி தொடர்ந்த வழக்கில், தற்போது சென்னை உயர்நீதிமன்ற தலைமை அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டி கல்லுப்பட்டி … Read more