செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி பணம் பறிக்க முயற்சி.. ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுவன் கைது <!– செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு… –>

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி, அவரது நண்பர்களிடம் பணம் பறிக்க முயன்ற ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சிறுவன் கைது செய்யப்பட்டான். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் கடந்த மாதம் சைபர் கிரைம் போலீஸில் புகார் ஒன்றை அளித்திருந்தார். பேஸ்புக்கில் உள்ள தனது புகைப்படத்தை எடுத்து, அதே பெயரில் போலியாக மற்றொரு கணக்கு தொடங்கி, தனது நட்பு வட்டத்தில் இருப்பவர்களிடம் மர்ம நபர் பணம் கேட்பதாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார். புகாரின் பேரில் … Read more

மார்ச் 6: தமிழக நிலவரம்; மாவட்ட வாரியாக கரோனா தொற்றுப் பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,013 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ எண் மாவட்டம் உள்ளூர் நோயாளிகள் வெளியூரிலிருந்து வந்தவர்கள் மொத்தம் மார்ச்.5 வரை மார்ச்.6 மார்ச்.5 … Read more

துபாயில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த இளையராஜா!

துபாயில் உள்ள இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் ஸ்டூடியோவுக்கு இசைஞானி இளையராஜா சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. துபாயில் நடைபெறும் ‘துபாய் எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சியில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த இசைக்கச்சேரிக்கு பிறகு, துபாயில் உள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா சென்றார். அங்கு அவரை ஏ.ஆர். ரஹ்மான் வரவேற்று ஸ்டூடியோவை சுற்றிக் காண்பித்தார். பின்னர், இளையராஜாவுடன் புகைப்படம் எடுத்து … Read more

நெல்லையில் ஜெயித்த ரிசார்ட் வியூகம்… சாம்பியன்களுக்கு அல்வா கொடுத்த புதுமுகங்கள்!

கட்டுரையாளர்:  த. வளவன்  தமிழகத்திலேயே அதிக திருப்பங்களுடன் நடந்த தேர்தல்களில் நெல்லை மேயர் தேர்வு முக்கியமானது. எந்த மாவட்டத்திலும் இல்லாத அளவுக்கு ஆள்கடத்தல், ரிசார்ட் அனுபவங்கள் என பல்வேறு கட்டங்களை தாண்டி மேயர், துணை மேயர் தேர்வு நடந்து முடிந்திருக்கிறது. இந்த போட்டிகளுக்கு மத்தியில்  மேயர், துணை மேயர் பதவிகளை இதுவரை தீவிர அரசியலில் அனுபவம் இல்லாத, இரு புதுமுகங்கள் மீது நம்பிக்கை வைத்து   பதவிகளையும்  கொடுத்து கவுரவப் படுத்தியுள்ளது திமுக தலைமை.  திருநெல்வேலி மாநகராட்சியில் 2 முறை … Read more

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியது தமிழக அரசு – வெளியான அதிர்ச்சி செய்தி.!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்தமாட்டோம்” என்று கூறி வந்த தி.மு.க. அரசு, தற்போது அந்த கல்விக் கொள்கைப்படி 10 மற்றும் 12-ஆம் வகுப்பிற்கான தேர்வு முறையில் மாற்றங்கள் செய்திருப்பது ஏன்?  எல்லாவற்றையும் போல இதிலும் தி.மு.க. இரட்டை வேடம் போடுகிறதா?  மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடைய இப்பிரச்னையில், நீட் தேர்வு விவகாரத்தைப் போல தி.மு.க. அரசு நாடகமாடக் கூடாது.  “மத்திய அரசின் புதிய … Read more

மார்ச் 6: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 6) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,51,013 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

அரக்கோணம்: இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதிய விபத்து: தலைமை காவலர் உயிரிழப்பு

அரக்கோணம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தலைமை காவலர் மீது தனியார் தொழிற்சாலை பேருந்து மோதிய விபத்தில் காவலர் உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதி நகர் பாரதிதாசன் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (47). இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி போக்குவரத்து காவல் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.இவருக்கு சுஜாதா என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு … Read more

கடலூர் திமுக எம்.எல்.ஏ. கட்சியில் இருந்து சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ம் தேதி நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் மார்ச் 4ம் தேதி நடைபெற்றது. அப்போது, திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுக தலைமையின் அறிவிப்பை மீறி திமுக வேட்பாளர்கள் போட்டியிட்டு பதவியைக் கைப்பற்றினர். இதனால், கூட்டணி கட்சி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் … Read more

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள் வாங்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு.!

அரசு நூலகங்களுக்கு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் வாங்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ளா அரசாணையில், வரும் நிதியாண்டிலிருந்து நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள் உள்ளிட்ட பருவ இதழ்களை அரசு நூலகங்களுக்கு கொள்முதல் செய்யும் வகையில், அவற்றை தோ்வு செய்யவும், அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் ஏற்கனவே உள்ள நாளிதழ்கள், பருவ இதழ்கள் தொகுப்பை மறுசீரமைப்பதற்கும் குழு அமைக்க வேண்டும் எனவும், இந்தக் குழுவுக்கு ஒருங்கிணைப்பு அலுவலரை நியமனம் செய்ய … Read more

மாயமான சிறுமி மரணம்.. இளைஞன் உட்பட 8 பேர் கைது <!– மாயமான சிறுமி மரணம்.. இளைஞன் உட்பட 8 பேர் கைது –>

மதுரை மேலூர் அருகே மாயமான சிறுமி எலி மருந்து சாப்பிட்டதால் உயிரிழந்த நிலையில், அவரை காதலிப்பதாகக் கூறி அழைத்துச் சென்ற இளைஞன், அவனது தாய் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மதுரை மேலூர் அருகே தும்பைப்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த மாதம் 14ஆம் தேதி அதே ஊரைச் சேர்ந்த நாகூர் ஹனிபா என்ற இளைஞனுடன் மாயமானார். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வந்த நிலையில், கடந்த … Read more