"சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசுடமை ஆக்க வேண்டும்" – முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை

காசி விசுவநாதர் கோயில்போல சிதம்பரம் நடராஜர் கோயிலை நாட்டுடமை ஆக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வி.வி சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், அவர்களுக்கு இக்கோவிலில் உரிமை இல்லை என்றும், கோவில் இருக்கக்கூடிய சொத்துக்களை அவர்களே கவனித்து வருவதாகவும், அதனை அரசு தன் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் . மேலும், அங்கு பூஜைகளை தமிழில் நடத்த வேண்டும் என்றும், சமஸ்கிருதத்தில் … Read more

IPL Cricket : மே 26-ல் தொடங்குகிறது ஐபிஎல் தொடர் : முதல்போட்டியில் சென்னை – கொல்கத்தா மோதல்

IPL 15 Season Fill Schedule Update : இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை 14- சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதுவரை சென்னை மும்பை கொல்கத்தா ஐதராபாத், டெல்லி, ராஜஸ்தான் பஞ்சாப் பெங்களூர் உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த இந்த தொடரில் … Read more

விபத்தில் இறந்த காதல் கணவன்.. மனைவி எடுத்த விபரீத செயல்..!

கணவன் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துகுடி மாவட்டம், குலசேகரநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுக பெருமாள். இவர் பார்வதி என்ற பெண்ணணை 3 ஆண்டுகளுக்கு காதல் திருமணம் செய்து கொண்டார்.  இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், பார்வதி துக்கம் தாளாமல் வீட்டிலுள்ள குளியலறையில் தற்கொலை செய்துகொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்ள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை … Read more

டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை ; ஸ்ரீராம் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு <!– டிராக்டரை பறிமுதல் செய்ததால் விவசாயி தற்கொலை ; ஸ்ரீராம் ப… –>

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே விவசாயி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக ஸ்ரீராம் பைனான்ஸ் நிதி நிறுவன ஊழியர்கள் 4 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவனூரைச் சேர்ந்த சின்னதுரை என்ற அந்த விவசாயி 3 தவணைகளை செலுத்தவில்லை எனக் கூறி, அவரது டிராக்டரை ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சின்னதுரை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். … Read more

கொடைக்கானல் மலைப்பகுதியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்: வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வெளிமாநிலத்தவரும் வருகை

கொடைக்கானல்: வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குளுமையைத் தேடி கொடைக்கானல் மலைப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதைத் தவிர்க்க வார இறுதிநாட்களில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்குச் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநில சுற்றுலாப் பயணிகளும் கடந்த இரண்டு தினங்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சுற்றுலாத் தலங்களில் அதிகம் காணப்பட்டனர். மோயர் சதுக்கம், பைன் மரக்காடு, தூண்பாறை, குணாகுகை, பிரையண்ட் … Read more

கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக திமுக மகளிரணி நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்ட்

திமுக மாநில மகளிர் தொண்டரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கோவை மாவட்டத்தைச் சேர்ந்த திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்மையில் நடந்து … Read more

ரூ.70000 சம்பளத்தில் வங்கி வேலை; 100 பணியிடங்கள்; டிகிரி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

SIDBI recruitment 2022 for 100 Assistant Manager vacancies apply soon: வங்கி வேலை வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. அதுவும் டிகிரி முடித்திருந்தாலே ரூ.70000 சம்பளத்தில் உதவி மேலாளர் ஆகலாம். இந்த அருமையான வாய்ப்பை நழுவவிடாதீர்கள். இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கி (Small Industries Development Bank of India), உதவி மேலாளர் (Assistant Manager) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்கள் … Read more

என்னை Sc என்று ஓரங்கட்டுறாங்க., ஆதங்கப்பட்ட மீனா ஜெயகுமாரை கட்சியை விட்டு நீக்கிய திமுக தலைமை.!

திமுகவில் சாதியப் பாகுபாடு காட்டப்படுவதாக செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி முன் தன் மனக்குமுறலை வெளியிட்டவரை கட்சியைவிட்டு தற்காலிக நீக்கம் செய்து தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுக மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் மீனா ஜெயகுமார் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தன்னை Sc என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து தனக்கு சீட்டு கிடைக்காமல் செய்கிறார்கள் – திமுக மகளிர் அணி செயலாளர் திருமதி மீனா ஜெயகுமார். இதுக்கு … Read more