செவித்திறன் குறையுடையவர்களை தமிழ், ஆங்கில வழியில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும்: முதல்வருக்கு செவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் வலியுறுத்தல்
சென்னை: செவித்திறன் குறையுடையவர்களுக்கு தமிழ் தவிர்த்து பிற தேர்வை தமிழ், ஆங்கில வழியில் எழுத அனுமதிக்க வேண்டும் என்றுசெவித்திறன் குறையுடையோர் பெற்றோர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து அச்சங்கம், முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சட்டப்பேரவையில் சமீபத்தில் அமைச்சர் அறிவித்த திட்டம் மூலம்,தமிழ் கற்றவர்களுக்கு மட்டுமே அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் செவித்திறன் குறையுடையோர் தங்கள் எதிர்காலத்தை எண்ணி மனக்கலக்கம் அடைந்துள்ளனர். செவித்திறன் குறையுடையோர் இந்த உலகை எப்போதும் ஓசையற்ற நிலையில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். … Read more