தமிழ்நாட்டில் எத்தனை நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு? – வானிலை மையம் தகவல்

வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் இலங்கை மற்றும் தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை … Read more

சென்னை மேயர் பதவியை அலங்கரிக்கும் பட்டியல் சமூக முதல் பெண்: யார் இந்த பிரியா?

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பெருநகர சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பட்டியல் சமூகப் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்து அறிவித்தபோதே, சென்னையின் மேயர் பதவியை அலங்கரிக்கப்போகும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் யார் என்ற கேள்விகள் எழுந்தன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் 19935ம் ஆண்டு திருத்தச் சட்டத்துக்கு பிறகு, சென்னை மாநகராட்சியில் மேயர் பதவியில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதன்படி, சென்னை மாநகராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மேயர் பதவியை வகித்து வந்துள்ளனர். சென்னையின் முதல் பட்டியல் சமூகத்தைச் … Read more

கோவில்களில் ஆடை கட்டுப்பாடு..?! பொதுமக்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

வழிபாட்டுத்தலங்களில் ஆடை கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டும் என்று பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இதுபற்றிய விசாரணையின்போது இந்து கோவில்களுக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் மற்ற பகுதிகளை சேர்ந்தவர்கள் இந்து மதத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உடையணிந்து வருகின்றனர். இதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு சில கோவில்களில் ஆடை கட்டுப்பாடு அமலில் இருக்கிறது. இது குறித்த அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் இருக்கும் அனைத்து கோவில்களையும் விளம்பர பலகைகள் வைக்க … Read more

தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல ; பள்ளிக்கல்வித்துறை <!– தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயமல… –>

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கட்டாயமல்ல என பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. நேற்று வெளியான 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையில் புதிதாக தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டு, அந்த பாடத்திற்கு மே 21-ந் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவே பொதுத்தேர்வு அட்டவணையில் தொழிற்கல்வி பாடம் சேர்க்கப்பட்டுள்ளது எனவும், அந்த பாடத்தில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது, அதில் கட்டாயம் தேர்ச்சி பெறுவது அவசியமல்ல எனவும் … Read more

நகராட்சி மன்றத்‌ தலைவர் பதவி – மாவட்ட வாரியாக திமுக பட்டியல்

தி.மு.கவின் சார்பாக போட்டியிடும்‌ நகராட்சி மன்றத்‌ தலைவர்கள் பட்டியலை மாவட்ட வாரியாக அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: திருவள்ளூர்‌ கிழக்கு மாவட்டம்‌ – நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌ பொன்னேரி _ டாக்டர்‌ பரிமளம்‌ திருவள்ளூர்‌ மத்திய மாவட்டம்‌ – நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌ பூவிருந்தவல்லி – காஞ்சனா சுதாகர்‌ திருவேற்காடு – இ. கிருஷ்ணமூர்த்தி திருநின்றவூர்‌ – உஷாராணி திருவள்ளூர்‌ மேற்கு மாவட்டம்‌ – நகராட்சி நகர்மன்றத்‌ தலைவர்‌ திருவள்ளூா – உதயமலர்‌ பாண்டியன்‌ திருத்தணி – … Read more

தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு – எவ்வளவு தெரியுமா?

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு மத்திய அரசு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, தமிழ்நாட்டிற்கு ரூ. 352.85 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு ரூ.17. 86 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களிடமிருந்து நிதியுதவி … Read more

Russia Ukraine Crisis Live: உக்ரைனுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை: சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இன்று தொடங்கியது!

Go to Live Updates Ukraine News: இந்திய மாணவர்களை, உக்ரைன் ராணுவம் பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளது. மனித கேடயங்களாக பயன்படுத்தி, ரஷ்ய எல்லைக்கு செல்ல விடாமல் தடுப்பதாக ரஷ்ய அதிபர் புதின் குற்றம்சாட்டியுள்ளார். மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதி! உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இந்திய மாணவர்களின் பாதுகாப்பில் முழு ஒத்துழைப்பு வழங்குவோம் என பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் உறுதியளித்தார். சி17 ரக போர் … Read more

#BigBreaking || இந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் எப்படி ஒழுக்கக்கல்வி நடத்துவார்கள்? சாட்டையை சுழற்றும் நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம்.! 

ஐபிஎல் ஏலம் போன்று ஆசிரியர் பணியிட மாறுதல் ஏற்படுகிறதா? 10 லட்சம் ரூபாய் முதல் கொடுத்து பணியிடமாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு எந்த வகையில் ஒழுக்க கல்வியை கற்பிப்பார்கள்? என்று, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி எஸ் எம் சுப்ரமணியம் கேள்வி எழுப்பி உள்ளார். இன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில்,  “லஞ்சம் கொடுப்பதன் அடிப்படையில் மட்டுமே அரசு பள்ளி ஆசிரியர்கள் கலந்தாய்வு மூலமாக … Read more

பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் – மதுரையில் கணவன், மனைவி தற்கொலை <!– பங்குச்சந்தை முதலீட்டில் நஷ்டம் – மதுரையில் கணவன், மனைவி … –>

பங்குசந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால், மதுரை மாவட்டத்தில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழைய குயவர்பாளையம் பகுதியை சேர்ந்த நாகராஜன் பங்குசந்தை ஆலோசகராகவும், முதலீட்டாளராகவும் இருந்து வந்த நிலையில், பங்குசந்தையில் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக திடீரென பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நாகராஜன் தனது 2 குழந்தைகளை உறவினர் … Read more

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கோரிக்கை: தேனி மாவட்ட நிர்வாகிகள் தீர்மானத்தால் சலசலப்பு

சென்னை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்க கோரி தீர்மானம் நிறைவேற்றி நேற்று பெரியகுளத்தில் நடந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் வழங்கப்பட்டதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டப்பேரவைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் என அடுத்தடுத்த தேர்தல்களில் அதிமுக தோல்வியை தழுவியது. இந்தநிலையில் அதிமுகவில் சசிகலா, தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தநிலையில் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அதிமுக சார்பில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் … Read more