மின்வசதி இல்லாததால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பாடம் படிக்கும் இருளர் இன குழந்தைகள்

ராணிப்பேட்டையில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் வீட்டில் வைக்கப்படும் சிறு சிறு விளக்குகளை வைத்தும், மெழுகுவர்த்தி வைத்தும் படிக்கும் சூழ்நிலையால் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விரைவில் தங்களுக்கு மின் வசதி சேவையை ஏற்படுத்த வேண்டும் என அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டம், அத்தியானம் கிராமத்தைதில் 20 கும் மேற்பட்ட இருளர் இன சமூகத்தை சேர்ந்த குடும்பங்களில், 60 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு மின் வசதி … Read more

ஜெயக்குமார் ஜாமீன் மனு 3-ம் தேதி விசாரணை: இ.பி.எஸ் – சி.வி சண்முகம் மீது புது வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் மார்ச் 3ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தது. இதனிடையே, ஜெயக்குமார் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கி … Read more

ஜெயக்குமார் ஜாமின் மனு, அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் ஒரு வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு முயற்சி செய்ததாக நரேஷ் என்பவர் தாக்கப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறை அவதை கைது சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கில் ஜாமின் வழங்க கோரி முன்னாள் அமைச்சர் தாக்கல் செய்த மனுக்களை … Read more

ஜெயக்குமார் ஜாமீன் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிப்ரவரி 19-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20-ம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை … Read more

தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 4-ல் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகம், புதுச்சேரியில் நான்காம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றும், நாளையும், தமிழகத்தில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, வருகிற 4ஆம் தேதி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் … Read more

எ.வ.வேலு, பி.டி.ஆர்., பொன் முத்து… மதுரை மேயர் ரேஸ்; களத்தில் குதித்த பெருந் தலைகள்!

தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மேயர் பதவிக்கான ரேஸ் தீவிரமாக உள்ளது. மேயர் ரேஸில் உள்ளவர்களுக்கு ஆதரவாக திமுகவின் பெருந்தலைகள் எ.வ.வேலு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பொன் முத்துராமலிங்கம் ஆகியோர் களத்தில் குதித்துள்ளனர். தமிழகத்தில் மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் மேயர் பதவிக்கான போட்டி கடுமையாக நிலவுகிறது. மதுரையின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், திமுகவின் மூத்த தலைவர்கள் … Read more

#சற்றுமுன் || விராட் கோலியின் 100-வது டெஸ்ட்., ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ.!

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் நடக்கிறது. இந்த ஆட்டம் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் ஆட்டமாகும். தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குறைந்துள்ள நிலையில், விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது.  கொல்கத்தா, இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்றஇந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான டி 20 போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டவில்லை. மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற … Read more

சிவாலயங்கள் தோறும் மகா சிவராத்திரி.! <!– சிவாலயங்கள் தோறும் மகா சிவராத்திரி.! –>

மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுவதாக புராணங்கள் சொல்கின்றன. மகா சிவராத்திரி தினத்தில் உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தமாக்கி விரதம் இருந்து, முழுக்க முழுக்க சிவனிடம் மனம் லயித்து, இரவு கண் விழித்து நான்கு சாமத்திலும் சிவ வழிபாடு செய்யவேண்டும். அவ்வாறு செய்வதால் துன்ப இருள் அகன்று சிவஜோதியின் அனுக்கிரஹத்தால் வாழ்வு செழிக்கும் என்பது நம்பிக்கை. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு அதிகாலை கோவில் … Read more

தமிழகத்தில் 350க்கும் கீழ், சென்னையில் 95க்கும் கீழ் குறைந்த கரோனா தொற்று: 1,025 பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் இன்று 348 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 34,49,721. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 7,50,039 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 34,06,649. இன்று வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 5 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 92 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 33 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் … Read more

கடலூரின் துணை மேயர் பதவியை கேட்கும் தவாக – கூட்டணி கட்சிகள் உடன் திமுக ஆலோசனை

உள்ளாட்சிப் பதவிகளுக்கான தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பது குறித்து கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை அமைச்சர் கே.என் நேரு தலைமையில் நடைபெற்றது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லத்தில், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கூட்டணி கட்சி பிரதிநிதிகளுடன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இடப்பங்கீடு குறித்த இந்தப் பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, … Read more