பிப்ரவரி 27: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 27) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,49,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

உக்ரைனில் சிக்கி தவிக்கும் குன்னூர் மாணவி – மீட்கக் கோரி பெற்றோர் கண்ணீர்

உக்ரைனில் சிக்கியுள்ள குன்னூரைச் சேர்ந்த மாணவியை மீட்கக் கோரி அவரது பெற்றோர் கண்ணீருடன் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். உக்ரைனில் போர் சூழல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் அங்குள்ள இந்திய மாணவிகள் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர். இவர்களில் நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்தவர் சாய் ஷோனு என்ற மருத்துவ மாணவியும் ஒருவர். இவர் உக்ரைன் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பயின்று வருகிறார். இந்நிலையில், அங்கு போதிய உணவு, குடிநீர் இல்லாமல் தங்கள் மகள் … Read more

சிலம்பம் சுற்றும் அமைச்சர் மனோ தங்கராஜ்; வைரல் வீடியோ

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சிலம்பம் சுற்றிய வீடியோ கட்சி தற்போது வைரலாகி வருகிறது. தனியார் அமைப்பினர் நடத்தும் தேசிய அளவிலான அடிமுறை சிலம்பம் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அறிஞர் அண்ணா விளையாட்டு நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிலம்பம் விளையாடி விளையாட்டு போட்டியை தொடங்கி … Read more

#INDvsSL || 38க்கு 74 ரன் (2 சிக்ஸர், 9 பவுண்டரி) இந்திய பந்துவீச்சை சிதறடித்து இலங்கை கேப்டன்.! இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இன்று மூன்றாவது டி20 போட்டி தர்மசாலா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.  இதனையடுத்து பேட்டிங் செய்வதற்கு முதலில் களமிறங்கிய இலங்கை அணிக்கு, இந்திய அணியின் … Read more

சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணன், தம்பி.. தட்டிக்கேட்க வந்த காவலர்களையும் தாக்கியதால் இருவர் கைது.! <!– சென்னையில் குடிபோதையில் தகராறு செய்த அண்ணன், தம்பி.. தட்ட… –>

சென்னை அம்பத்தூர் அருகே நள்ளிரவில் குடிபோதையில் தகராறு செய்த கல்லூரி மாணவர்கள் இருவர் தட்டிக்கேட்க வந்த காவலர்களையும் தாக்கியதாக கைது செய்யப்பட்டனர். கொரட்டூர் டி.வி.எஸ் நகரில் சனிக்கிழமை நள்ளிரவில் இளைஞர்கள் இருவர் அவ்வழியாகச் சென்றவர்களிடம் மது போதையில் தகராறு செய்துள்ளனர். காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, கொரட்டூர் காவல் நிலைய ஏட்டு சீனிவாசன், ஊர்காவல் படை வீரர் ஆகாஷ்பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். இளைஞர்களின் அட்டகாசத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்த ஆகாஷ்பாபுவை ஆபாசமாகப் … Read more

கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன் வர வேண்டும்: அமைச்சர் ஆர்.காந்தி

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரும்பு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகள் முன் வர வேண்டும் என்று அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ரணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கரடிக்குப்பம் ஊராட்சியில் நவீன இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்யும் செயல்விளக்கம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: … Read more

போர்களத்தில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்கள்: வரவேற்பு கொடுத்த அமைச்சர்

உக்ரைனிலிருந்து பத்திரமாக சென்னை திரும்பிய தமிழக மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். உக்ரைனிலிருந்து அண்டை நாடுகள் வழியாக இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். ருமேனியாவிலிருந்து சிறப்பு விமானம் மூலம் முதல்கட்டமாக வந்த தமிழக மாணவர்கள் நேற்றிரவு டெல்லி திரும்பினர். டெல்லியிலிருந்து விமானம் மூலம் அவர்கள் சென்னை அழைத்து வரப்பட்டனர். உக்ரைனில் மருத்துவம் படித்து வந்த சென்னையைச் சேர்ந்த ஹரிஹர சுதன், சகீர் அபுபக்கர், சேலத்தைச் சேர்ந்த சாந்தனு பூபாலன், தேனியைச் சேர்ந்த வைஷ்ணவி … Read more

என்னாது உக்ரைன்ல குண்டு வெடிச்சதுல கொரோனா செத்து போச்சா… இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்

Tamil memes news in tamil: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்றைய இணைய பக்கங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம். இன்றைய கலக்கல் … Read more

கள்ளகாதலுடன் கணவனை கொன்ற மனைவி கைது… கள்ளகாதலனுக்கு காவல்துறை வலைவீச்சு..!

கள்ளகாதலுக்காக கணவனை கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் குச்சிப்பாளையம் காலனி தெருவை சேர்ந்தவர் இளையராஜா (வயது 42). இவருக்கு தஞ்சை மாவட்டம் நெய்வாசல் பகுதியை சேர்ந்த அனிதா  என்பவருடன் திருமணம்  நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மனைவியை காணவந்த அவரை கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் … Read more

பழனியில் தினசரி குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தந்தையை கிரிக்கெட் மட்டையால் தந்தையை அடித்துக் கொன்ற மகன்.! <!– பழனியில் தினசரி குடித்துவிட்டு வந்து ரகளை செய்த தந்தையை க… –>

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தினசரி குடித்துவிட்டு வந்து தாயிடமும் தங்கையிடமும் ரகளை செய்து வந்த தந்தையை 11ஆம் வகுப்புப் படிக்கும் மகன் கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. சத்திரப்பட்டியைச் சேர்ந்த ஓமந்தூரான் என்ற நபர், கேரளாவில் வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்து வந்தார். தினசரி குடித்துவிட்டு வந்து மனைவியையும் மகளையும் அடித்துத் துன்புறுத்துவது அவரது வழக்கம் என்று கூறப்படுகிறது. 11ஆம் வகுப்புப் படித்து வரும் இவரது மகன், தந்தையின் செயலை … Read more