சமூகநலத்துறை அதிகாரிகளை மிரட்டி லஞ்சம் – இணை இயக்குநர் மீது வழக்கு

சமூக நலத்துறை அதிகாரிகளையே மிரட்டி லஞ்ச பெற்றதாக அத்துறையின் இணை இயக்குநர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சமூகநலத்துறையில் மதிய உணவுத் திட்டத்தின் இணை இயக்குநராக இருப்பவர் ரேவதி. இவர் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள் மற்றும் சத்துணவு ஊட்டச்சத்து மாவட்ட திட்ட அதிகாரிகளுக்கு எதிராக போலியான லஞ்சப் புகாரை உருவாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க லஞ்சம் கேட்டதாகவும் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட லஞ்ச … Read more

75 நகரங்களின் தலைவர்கள், சி.இ.ஓ., ஆணையர்கள் பங்கேற்ற ஓட்டப் பந்தயம்; முதலிடம் பிடித்த அமைச்சர் மா.சு

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியின் சாா்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ், உடற்பயிற்சி, நடைப்பயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற மக்களின் உடல் நலன் சாா்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் இந்திய அளவில் 75 நகரங்களைச் சேர்ந்த தலைவா்கள், பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ, ஆணையா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா். இணையதளத்தின் வாயிலாகப் பதிவு செய்த நபா்களின் … Read more

பயிற்சி நர்சை கட்டாய திருமணம் செய்த ஏஜென்ட்..போக்சோவில் தூக்கிய போலீசார்.!

பயிற்சி நர்சை கடத்தி கட்டாய திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்த தனியார் நிறுவன கலெக்ஷன் ஏஜெண்டை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி நர்சாக 17 வயது பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்தப் பெண்ணை கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடி வந்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட … Read more

மனநிலை பாதிக்கப்பட்டவரை பேச வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்.! <!– மனநிலை பாதிக்கப்பட்டவரை பேச வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை … –>

தேனி மாவட்டம் கம்பம் அருகே மனநலம் பாதிக்கப்பட்டவரை விசாரணை என்ற பெயரில் பேச வைத்து, வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிய பெண் காவல் ஆய்வாளர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் பழனிசெட்டிப்பட்டியிலுள்ள வீடு ஒன்றில் திருட முயன்றதாக ஒரு நபரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தமிழிலும் ஆங்கிலத்திலும்  சம்மந்தமே இல்லாமல் ஏதேதோ பேசிய அந்த நபர், போதைக்கு அடிமையாகி, மனநல காப்பகத்தில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர் என்பது தெரியவந்தது. சாவியுடன் … Read more

உக்ரைனில் படித்து வரும் காரைக்கால் மாணவர்களின் குடும்பத்தினருடன் அமைச்சர் சந்திர பிரியங்கா சந்திப்பு 

காரைக்கால்: உக்ரைனில் படித்து வரும் காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களின் குடும்பத்தினரை புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று (பிப்.27) நேரில் சந்தித்து பேசினார். காரைக்கால் பி.எஸ்.ஆர் நகரைச் சேர்ந்த வி.கார்த்தி விக்னேஷ், அ.சிவசங்கரி, கோட்டுச்சேரியைச் சேர்ந்த அ.பிரவினா, கிளிஞ்சல்மேட்டைச் சேர்ந்த அ.சந்துரு ஆகிய 4 பேர் உக்ரைன் நாட்டில் தங்கி படித்து வருகின்றனர். தற்போது அங்கு போர் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் மாணவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது ஏன்? – பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

பொதுமக்களுக்கு தேர்தல் மீதே நம்பிக்கை போய் விட்ட காரணத்தால் தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்கு சதவீதம் குறைந்தது. டிபன் பாக்ஸில் பணம் வைத்து வீட்டுக்கு வீடு கொடுத்ததுதான் திராவிட மாடல் வெற்றியா என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற … Read more

கல்லீரல் பாதுகாப்பில் முக்கிய பங்கு… கரும்பு ஜூஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க!

சாலையோரங்களில் மிக எளிதாக கிடைக்கும் கரும்புச் சாறில் இத்தனை நன்மைகள் இருக்கிறதா என்பது இந்தக் கட்டுரையை நீங்கள் படித்த பிறகு தெரிந்து கொள்வீர்கள். முழுமையாக படியுங்கள். கரும்புச்சாறு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் பல நோய்களுக்கு எதிராக உடல் சண்டையிட உதவுகிறது. கரும்புச்சாறு மஞ்சள் காமாலை, இரத்த சோகையை தடுக்க உதவும். பழச்சாறு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. மக்கள் ஆண்டு முழுவதும் பல வகையான பழச்சாறுகளை குடித்து மகிழ்கின்றனர். சில பழங்களில் ஆரோக்கியத்திற்கு நல்ல … Read more

மாடுகளை சுற்றித் திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம், சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் மாடுகளை சுற்றித் திரிய விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.  … Read more

இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட காட்டுப்பூச்சியை காய்ச்சி எடுத்த இளைஞர்கள் <!– இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட காட்டுப்பூச்சிய… –>

கரூர் அருகே சினிமா பாணியில் இரு சக்கர வாகனங்களை திருடி சிக்கிக் கொண்ட, இளைஞரை, வாகனத்தை பறிகொடுத்தவர்கள் ஒன்று கூடி  அடித்து நொறுக்கிய வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டம் மணச்சநல்லூரை சேர்ந்த செந்தமிழ் என்பவருக்கு சொந்தமான ஹோண்டா ஆக்டிவா வாகனத்தை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி கடந்த அக்டோபர் மாதம் 25 ந்தேதி இரவு பறித்துச்சென்று உள்ளனர். புகாரின்பேரில் விசாரணையை முன்னெடுத்த திருவெரும்பூர் போலீசார், பறித்துச்செல்லப்பட்ட வாகனத்தை 28ந்தேதி கரூர் … Read more

சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

சென்னை: தெலங்கானா மாநிலத்தில் பயிற்சி விமானம் நொறுங்கி விழுந்த விபத்தில் பலியான சென்னையைச் சேர்ந்த பெண் பயிற்சி பைலட்டின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்”. இவ்வாறு அவர் கூறியிருந்தார். முன்னதாக, … Read more