ஜாமீன் உண்டா… இல்லையா? – ஜெயக்குமார் மனு மீது நடந்த காரசார விவாதம்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு மீதான விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது. திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு தண்டையார்பேட்டை போலீசார் ஜார்ஜ் டவுன் 15-வது குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று 15-வது குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முரளி கிருஷ்ணா ஆனந்த் … Read more

100 படுக்கைகளுடன் இ.எஸ்.ஐ., மருத்துவமனை; கட்டுமானப்பணி துவக்கம் : நாட வேண்டாம், கோவையை; இங்கேயே, உயர் சிகிச்சை! ஒரு ஆண்டுக்குள் பணி முடிக்க உத்தரவு

பேரூராட்சிகளில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ் வாக்கு சதவிகிதம் என்ன?

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில்’ மொத்தம்12,607 பதவிகளுக்கு’ கடந்த 19-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இந்த தேர்தல்’ பலமுனைப் போட்டியாகத் தோன்றினாலும், மாநிலம் முழுவதிலும் உள்ள பல பகுதிகளில் திமுக மற்றும் அதிமுக இடையேதான் முக்கியப் போட்டி நிலவியது. இறுதியாக’ நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. அதன் ஒருபகுதியாக’ 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியது. நகராட்சி, பேரூராட்சியிலும் கூட திமுக மகத்தான வெற்றியைப் … Read more

கொசுக்களை ஒழிக்க நடவடிக்கை! மாநகராட்சி வேண்டுகோள்.!

வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தன்னீர் தொட்டி உள்ளிட்டவற்றில் கொசுப்புழுக்கள் அண்டாத வண்ணம் பரிமரிக்க வேண்டும் என பொதுமக்களை சென்னை மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசுக்கள் மற்றும் கொசுப்புழுக்களை ஒழிப்பது தொடர்பாக கூடுதல் மாநகர நல அலுவலர்கள், மண்டல நல அலுவலர்கள் மற்றும் துப்புரவு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் … Read more

5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது <!– 5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தை கைது –>

கோவையில் 5 வயது மகனை கொடூரமாக தாக்கிய தந்தையை போலீசார் கைது செய்தனர். மதுக்கரை அறிவொளிநகர் பகுதியை சேர்ந்த சாதிக் பாஷா, கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், மூத்த மகன், ரெஜினா பானுவுடனும், இளைய மகன், சாதிக் பாஷாவுடனும் வசிக்கின்றனர். இந்நிலையில், இளைய மகன் தனக்கு தெரியாமல் தாய் ரெஜினா பானுவை சந்தித்ததால் ஆத்திரமடைந்த சாதிக் பாஷா, சிறுவனை கொடூரமாக தாக்கி அதனை … Read more

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிக்கிறது: தலிபான் அரசு

காபுல்: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு கவலையளிப்பதாக ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அந்த நாட்டின் விமானப்படை, கடற்படை, ராணுவத் தளங்கள் மற்றும் ஆயுத கிடங்குகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. ஏவுகணைத் தாக்குதலும் நடத்தப்படுகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைநகரில் ரஷ்ய போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறப்பதால், அங்கு வசிக்கும் மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். இதுவரை 100-க்கும் … Read more

"எல்லார் மீதும் அன்பு செலுத்துங்கள்" – வைரல் சிறுவன் கலாமுக்கு வீடு வழங்கியது தமிழக அரசு!

தனியார் இணையதள தொலைக்காட்சி ஒன்று பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிவது குறித்து மாணவர்களிடம் கருத்து கேட்டது. அதற்கு சென்னை கண்ணகி நகரை சேர்ந்த அப்துல்கலாம் என்ற சிறுவன் அளித்த பதில் இணையத்தில் வைரலானது. அந்த பேட்டியில் பேசிய சிறுவன், “உலகத்துல அனைவரும் சமம், நம்ப யாரையும் புடிக்காதுன்னு முடிவு எடுக்க முடியாது. எல்லாரும் நம்பளை மாதிரிதான். சிலப்பேருக்கு கஷ்டம் இருக்கும். அந்தக் கஷ்டத்தை வெளில காட்ட மாட்டாங்க. உள்ளேயே வச்சிக்கிட்டு இருப்பாங்க. யாரையும் புடிக்காதுன்னு சொல்லாதீங்க. எல்லாரும் … Read more

தேனாம்பேட்டை நட்சத்திர ஹோட்டலில் நடனம்: அதிகாரி மனைவியை ‘டீஸ்’ செய்த அரசு டாக்டர் கைது

Tamilnadu News Update : சென்னையில் தனியார் ஹேட்டலில் நடைபெற்ற நடன நிகழ்ச்சியில், கடலோர காவல்படை அதிகாரியின் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு மருத்துவக்கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தேனாம்பேட்டையில், பிரபல நட்சத்தி ஹோட்டல் ஒன்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடன நிகழ்ச்சி நடைபெற்றள்ளது. இந்த நிகழ்ச்சியில், கடலோர காவல்படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது மனைவியுடன் பங்கேற்றுள்ளார். இதில் நள்ளிரவு நேரத்தில் அதிகாரியின் மனைவி நடனமாடிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் அவரிடம் … Read more

போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சவடியில் கள்ள ஓட்டு தொடர்பாக திமுக மற்றும் அதிமுக வினரிடையே பிரச்சினை எழுந்தது. அந்த பிரச்டனை தொடர்பான புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் … Read more