பிப்ரவரி 24: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 24) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,47,581 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

பாரதிக்கு செக் வைத்த கண்ணம்மா… அதிர்ச்சியில் உறைந்த வெண்பா

Bharathi Kannamma Serial Rating Update : அப்பாடா இவ்வளவு நாள் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை இப்போ சொல்லிட்டீங்களே சூப்பர் என்று சொல்லவைத்துள்ள சீரியல்தான் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்தால் இருவரின் வாழ்க்கையும் நகரம் தான் என்பதற்கு சிறந்த உதாரணம் பாரதி கண்ணம்மா. தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கண்ணம்மாவை தனது தோழியின் பேச்சை பேச்சை கேட்டு பாரதி வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறான்.அவன் முன் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைரலாக்கியத்துடன் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வெற்றி பெற்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஒரே … Read more

ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா சிலைக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் மாலை அணிவித்து மரியாதை <!– ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெயலலிதா சிலைக்… –>

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினர். பின்னர், 74 கிலோ பிறந்தநாள் கேக்கை வெட்டி அங்கிருந்த தொண்டர்களுக்கு அவர்கள் அளித்தனர். தொடர்ந்து ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு அடங்கிய பிறந்தநாள் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.   Source link

இந்திய தூதரக உதவி கிடைக்காமல் தவித்து வருகிறோம்: உக்ரைனில் இருந்து அந்தியூர் மாணவி பகிர்ந்த தகவல்கள்

ஈரோடு: இந்திய தூதரகத்தின் உதவி கிடைக்காத நிலையில், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறோம் என உக்ரைனில் மருத்துவம் படிக்கும் அந்தியூர் மாணவி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரைச் சேர்ந்த நாகராஜ் – குணவதி தம்பதியினரின் மகள் மவுனிசுகிதா (20). உக்ரைனில் உள்ள லையு நேசனல் மெடிகல் யுனிவர்சிடியில், மூன்றாமண்டு மருத்துவம் படித்து வருகிறார். ரஷ்யா – உக்ரைன் இடையே போர் மூண்டுள்ள நிலையில், தங்களை மீட்க இந்திய அரசு உதவ வேண்டும் என வேண்டுகோள் … Read more

ஓடும் ஆம்புலன்ஸில் பிரசவம்: துரிதமாக செயல்பட்ட செவிலியரால் மகிழ்ச்சியடைந்த தம்பதியினர்

திருப்பத்தூரில் கூலித் தொழிலாளியின் மனைவியை பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில், ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே இரட்டை ஆண் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்தது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சின்னசாமி, விஜயசாந்தி தம்பதியினர். இவர்கள் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தங்கி ஒப்பந்த முறையில் விறகு வெட்டும் தொழில் செய்து வந்தனர். இந்நிலையில்,, நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விஜயசாந்திக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அருகிலுள்ள திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். … Read more

சென்னையின் முதல் தலித் பெண் மேயர் யார்? திமுக பரிசீலனையில் 3 பேர்

சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் வகுப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் வெற்றிபெற்றுள்ள 3 பட்டியல் வகுப்பு பெண்களின் பெயர்களை திமுக தலைமை பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. மேயர் பதவி கவுன்சிலர்களாக மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படும். அதனால், ஆளும் திமுகவில் மேயர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக தலைநகர் சென்னை மாநகராட்சியில் யார் என்ற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளன. 3 … Read more

#INDvSL || இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி., 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங் தேர்வு செய்தது.. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பான ஒரு தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 32 பந்துகளில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 44 ரன்களை சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான … Read more

சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி <!– சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்கும… –>

திமுக பிரமுகரை அரை நிர்வாணமாக்கி தாக்கிய புகாரில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், எதிர்க்கட்சிகளை நசுக்கும், பழிவாங்கும் எண்ணத்தில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும், நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடந்த முறைகேடுகளை சட்ட ரீதியாக சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.   Source link