தமிழக வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவும்: முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

சென்னை: தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஒவ்வொரு திட்டமும், இந்த மாநிலத்தில் வாழும் லட்சக்கணக்கான உழவர் பெருமக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்வதாகவும், அவர்களது நிலத்தை முன்னேற்றுவதாகவும், வளத்தை அதிகப்படுத்துவதாகவும் அமையப்போகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் 2022-23 வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர் – என்றார் வள்ளுவப் பெருந்தகை. … Read more

”தமிழக பட்ஜெட்டை ஒட்டு மொத்த இந்தியத் தலைவர்களும் பாராட்டுகிறார்கள்” – உதயநிதி

”தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை இந்தியாவின் ஒட்டுமொத்த தலைவர்களும் பாரட்டுகின்றனர்” என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். மதுரை ஆனையூரில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் வெங்கல சிலையினை திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மூர்த்தி, அன்பில் மகேஷ், மெய்யனாதன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு சிலை அமைக்க வேண்டும் என மக்கள் நீண்ட நாள் கோரிக்கையை தொடர்ந்து வணிக வரித்துறை … Read more

தந்தை கடன் வாங்கியதால் மகன் விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

தந்தை கடன் வாங்கியதால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்.  இவரது மகன்   பார்த்த சாரதி  அங்குள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.  இந்த நிலையில், படிக்க சென்ல்வதால சென்ற அவர் அறைக்கு சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்தனர். அவரின் அறைக்கு சென்று பார்த்த போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் … Read more

“மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் நிதிநிலை அறிக்கை” – வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து முதலமைச்சர் புகழாரம்

“உழவர் பெருமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ள வேளாண் நிதிநிலை அறிக்கை, மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழகத்தின் சாகுபடிப் பரப்பினை உயர்த்துவது, வேளாண்மைச் சார்ந்த அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைப்பது, ஒட்டுமொத்தமாக கிராமங்களை வளர்த்தெடுப்பது, உழவர்களின் வருமானத்தை உயர்த்துவது, மாற்றுப்பயிர்களை அறிமுகம் செய்வது, இயற்கை இடர்பாடுகளில் இருந்து உழவர்களைக் காப்பது என பல்வேறு நோக்கம் கொண்டதாக இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது எனக் கூறியுள்ளார். … Read more

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிறது வேளாண் பட்ஜெட்: கே.எஸ்.அழகிரி பாராட்டு

சென்னை: விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்கிற வகையில் முதல்வரின் வழிகாட்டுதலோடு விவசாயிகளுக்கென தனி நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையிலும், பரப்புரையிலும் கொடுத்த வாக்குறுதிகளின்படி வேளாண்மைக்கான முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. தனி பட்ஜெட் மூலம் வேளாண்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது. வேளாண்மைக்கென மொத்தம் ரூபாய் 33,007 கோடி … Read more

குடிநீரில் கலந்துவரும் ஓஎன்ஜிசி எண்ணெய் – குழந்தைகள் உள்பட 6 பேர் மருத்துவமனையில் அனுமதி

மயிலாடுதுறை அருகே குடிநீரில் ஓ.என்.ஜி.சி.யில் இருந்து எண்ணெய் கலந்து வருவதால், 15-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்று போக்கு, மயக்கம் ஏற்பட்டு, 2 குழந்தைகள் உட்பட 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா, சேத்திரபாலபுரம் மெயின் ரோட்டில், ஓஎன்ஜிசி எண்ணெய் சேமிப்பு கிடங்கு உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள எண்ணெய் கிணறில் இருந்து எடுக்கப்படும் வாயு மற்றும் எண்ணெய் இங்கு சேமித்து வைக்கப்பட்டு வருகின்றன. இந்த … Read more

9ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை.. காமகொடூரன் மீது பாய்ந்து போக்சோ..!

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கதிரேசன் . இவர் அந்த பகுதியில் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவர் அந்த பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கதிரேசன் அந்த சிறுமியை அவனியாபுரம் பைபாஸ் ரோட்டில் புதர் பகுதிக்கு அழைத்து  சென்று ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். … Read more

தமிழக வேளாண் பட்ஜெட்டில் ”இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டம் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது” – அன்புமணி இராமதாஸ்

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதி நிலை அறிக்கையில், சிறுதானிய சாகுபடி மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும், புதிதாக திறக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை என குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் வேளாண் விளைபொருட்களின் கொள்முதல் விலைகளை உயர்த்தவும், கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படாது ஏமாற்றமளிப்பதாகவும், நெல் கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் … Read more

”மாதா, பிதா, குரு, கூகுள், தெய்வம்…” – தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து ஆளுநர் தமிழிசை பேச்சு

புதுச்சேரி: தொழில் நுட்ப வளர்ச்சியானது நேர்மையான வளர்ச்சிகளுக்கு வழிவகுக்க வேண்டும் என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தமிழ்நாடு-புதுச்சேரி தகவல் தொழில்நுட்ப சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ‘தகவல் தொழில்நுட்ப மாநாடு 2022, தனியார் பீச் ரிசார்ட்டில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: ‘‘இன்றைய நவீனமயமாதலின் தேவையை உணர்ந்து பிரதமர் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னெடுத்தார். தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவம், … Read more

”சென்னை மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் குப்பைக் கொட்டினால் அபராதம்” – சென்னை மாநகராட்சி

”பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் வைக்கப்பட்டுள்ள சாலைகள் மற்றும் தெருக்களின் விவரங்கள் குறித்த பலகைகளில் சுவரொட்டிகள் ஒட்டும் நபர்கள் மீது காவல் துறையில் புகார் தெரிவிக்கப்பட்டு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. மேலும், ”பொதுமக்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து தூய்மையாக பராமரிக்க முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019ன்படி அபராதம் விதிக்கப்படும்” என்றும் … Read more