வேளாண் பட்ஜெட்டில் விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை: முத்தரசன் கருத்து

சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இரண்டாவது வேளாண் பட்ஜெட் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருக்கிறது என்றும், விவசாயத் தொழிலாளர் நலன்கள் குறித்த அறிவிப்பு ஏதும் இல்லை என்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (சனிக்கிழமை) சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை முன்வைத்துள்ளார்.“செய்வதை சொல்வோம்; சொல்வதை செய்வோம்” என்ற நடைமுறையில் … Read more

ஹிஜாப் விவகாரம் குறித்து எனது நிலைப்பாடு இதுதான்! – அண்ணாமலை விளக்கம்

மத அடையாளங்களுடன் பள்ளிக்குச் செல்லக் கூடாது என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை மேலூர் அருகே அம்பலகாரன்பட்டி வல்லடிகாரர் கோயில் திருவிழாவில் கலந்து கொண்டார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை. பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது:- ”உண்மையான தேசியத்தையும் ஆன்மிகத்தையும் நம்புபவர்கள் பா.ஜ.கவில் இருக்கின்றனர். மாற்றுக் கட்சி என்ற வார்த்தையை நான் பயன்படுத்த மாட்டேன் என்னை பொறுத்தவரை இன்று பாஜகவில் இருப்பவர்கள் நாளை பாஜகவில் இணைய உள்ளவர்கள் அவ்வளவே. பா.ஜ.கவின் சித்தாந்தம் புரியும்போது அனைத்து சகோதர … Read more

அநாகரீகமாக நடந்து கொண்ட வழக்கு: சென்னையில் டாக்டர் சுப்பையா கைது

Former ABVP leader Dr.Subbaiah arrested for harassment case: மூதாட்டி வீட்டின் வாசலில் அநாகரீகமாக நடந்துக் கொண்ட வழக்கில் ஏபிவிபி முன்னாள் தலைவரும் மருத்துவருமான சுப்பையா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். 2017 முதல் 2020ஆம் ஆண்டுவரை பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பின் தேசிய தலைவராக இருந்தவர் மருத்துவர் சுப்பையா. பிரபல புற்றுநோய் மருத்துவரான இவர், சென்னையில் கடந்த 2020 ஜூலை மாதத்தின்போது, ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் தளத்தில் வசித்து வந்தார். … Read more

திட்டங்கள், ஒதுக்கப்பட்ட நிதிகள் திமுகவினரும், இடைத்தரகர்களும் பயன்பெறவே உதவும். இதனால் விவசாயிகளுக்கு பயனில்லை – ஜி கே நாகராஜ்.! 

விவசாயிகளை வியாபாரிகளாக மாற்ற, இடைத்தரகர்களை ஒழிக்க எந்த நடவடிக்கையும் இல்லாத வேளாண்மை  நிதிநிலை அறிக்கை என்று, பாஜகவின் விவசாய அணி மாநில தலைவர் ஜிகே நாகராஜ் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “2022-2023 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்துறை அமைச்சர் M.R.K.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் இயற்கை விவசாயம் ட்ரோன் மூலமாக மருந்துகள் தெளித்தல். மண்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்களையே பிரதிபலிக்கிறது. இதில் … Read more

“மதுரை பையன், இங்கிலாந்து பொண்ணு” – காதல் திருமணம்.! திரளாக வந்து வாழ்த்திய உறவுகள்

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்த நிலையில், வரவேற்பு நிகழ்வுக்கு வந்திருந்தவர்களுக்கு மணமக்கள் மரக்கன்றுகளை வழங்கினர். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த சாம்டேவிட் லிவிங்ஸ்டன் என்பவர் இங்கிலாந்தில் பிசியோதரபிஸ்ட் – ஆக பணியாற்றி வருகிறார். இங்கிலாந்து ப்ரஸ்டன் பகுதியைச் சேர்ந்த சாரா எலிசபெத் என்ற பெண்ணுடன் காதல் வயப்பட்டு, கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி இருவருக்கும் இங்கிலாந்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா காரணமாக தாமதமாக தமிழகம் திரும்பிய … Read more

எஸ்.சி, எஸ்.டி நலத்துறையால் 5 ஆண்டுகளில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைப்பு: ஆர்டிஐ தகவல்

மதுரை: கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ.927 கோடி பயன்படுத்தப்படாமல் அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு தமிகழ பட்ஜெட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு என ரூ.4,281 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது ஒவ்வொரு துறைக்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும். ஆனால் … Read more

மேய்ச்சலின் போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 4 மாடுகள் பரிதாபமாக உயிரிழப்பு

ஊனையூரில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று பசுமாடு, ஒரு காளைமாடு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த அதில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஊனையூர் கிராமத்தில் சின்னக்கருப்பன் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. அந்த வயலில் அதே கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா மற்றும் மல்லுபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம், கென்னடி மற்றும் வடிவேலு ஆகியோருக்குச்; சொந்தமான நான்கு மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த நான்கு … Read more

விஜய் வாய்ஸில் மற்றொரு பாசிட்டிவ் பாடல்; பீஸ்ட் பட ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு ரசிகர்கள் வரவேற்பு

Vijay’s Beast second song Jolly O Gymkhana released: பீஸ்ட் படத்தில் விஜய் பாடியுள்ள ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். மேலும், செல்வராகவன், யோகி பாபு, அபர்ணா தாஸ், ரெட்டின் … Read more

தமிழக வேளாண் பட்ஜெட் – 2022 : கறி சமைக்கமுடியாத காகித சுரைக்காய் – டிடிவி தினகரன்.!

விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத வெறும் அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக தமிழக அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் போடப்பட்ட இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் பெரும்பாலானவற்றிற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டதாக வேளாண் அமைச்சர் பெருமிதம் பொங்கக் கூறியிருக்கிறார்.  ஆனால், அவற்றில் எத்தனை அறிவிப்புகளால் விவசாயிகள் பயனடைந்திருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால், ஏமாற்றமே … Read more

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு ; சென்னை வானிலை மையம்

வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்த செய்திக் குறிப்பில், வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான அளவில் மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை … Read more