பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற இரு இளைஞர்கள் <!– பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் தப்பிசென்ற சென்ற… –>

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் கொடுக்காமல் இரண்டு இளைஞர்கள் தப்பிச்செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றிற்கு நேற்றிரவு duke பைக்கில் பெட்ரோல் போட வந்த இரண்டு இளைஞர்கள் 800 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் பரிவர்த்தனைக்காக ஒரு கார்டு வழங்கியுள்ளனர். அதில் பணம் இல்லாததால் இரண்டு 500 ரூபாய் நோட்டுகளை வழங்கிய இளைஞர்கள், அதன் பின் சில்லறை தருவதாக கூறி ஆயிரம் … Read more

பொய் சொல்ல கூச்சமில்லாதவர்கள் மத்தியில் உண்மையைப் பேச தயங்காதீர்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்வேகக் கடிதம்

சென்னை: “பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒட்டி திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: ”நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். நல்லாட்சி வழங்கி வரும் திமுக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் … Read more

பள்ளி மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் மன நலன் சார்ந்த பயிற்சி வழங்கும் அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.!

கல்வியில் பின் தங்கியுள்ள ஒன்றியங்களில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வாழ்வியல் மற்றும் மன நலன் சார்ந்த பயிற்சிகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் யுனிசெப் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 44 ஒன்றியங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் … Read more

மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் ஆளும் கட்சியினருடன் வந்து வேட்பு மனு வாபஸ் <!– மதுரையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் … –>

அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் வேட்பாளர் மனு வாபஸ் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 9ஆவது வார்டு அதிமுக பெண் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றார் அதிமுக பெண் வேட்பாளர் இந்திராணி பாலமுருகன் கடத்தப்பட்டதாக, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தர்ணா வாடிப்பட்டி அண்ணாசிலை அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அதிமுகவினர் தர்ணா கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அதிமுக பெண் வேட்பாளர் இந்திராணி, தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார் ஆளும் … Read more

நடிகர் விஜய் சந்திப்பு பற்றி பதிலளிப்பதைத் தவிர்த்து புறப்பட்ட முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுவையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி நடிகர் விஜய் சந்திப்பு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பதைத் தவிர்த்தார். புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 12-ம் ஆண்டு விழா கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி கட்சியின் ஆண்டு விழாவை கட்சி கொடியேற்று பூஜை செய்து தொடங்கி வைத்து தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறியதாவது: ”எங்களது ஆட்சியில் புதுச்சேரி வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுத்தி வருகிறோம். மத்திய … Read more

இந்து மத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் – இந்து முன்னணி

civic polls Hindutva fringe outfit seeks to make inroads : இந்து மத உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகளுக்கு ஆதரவு தர வேண்டும் மக்கள் என்று இந்து முன்னணி, வர இருக்கும் உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவித்துள்ளது. சில ஆண்டுகளாக வகுப்புவாத பிரச்சனைகளை கிளப்பி வந்த இந்து அமைப்பான இந்து முன்னணி தற்போது இந்து வாக்காளர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், எந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, இந்திய மதிப்பு மற்றும் … Read more

இதை செய்தால் வெற்றி அதிமுகவிற்கு தான்.. பூங்குன்றன் கொடுத்த ஐடியா.!!

அதிமுகவில் முன்னாள் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், தற்போது பொறுப்பில் இல்லாத தகுதி வாய்ந்தவர்களை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்க வேண்டுமென முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், சென்னை தவிர மற்ற மாநகராட்சித் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் பட்டியல் பார்த்தேன். பணிக்குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற பணிக்குழு அவசியம் என்பதில் எனக்கு மாற்று கருத்தில்லை. மாவட்ட கழகச் செயலாளர்கள் பெயர்கள் தான் … Read more

எஸ்பிஐ ஏடிஎம்-ல் சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துவிட்டு மர்மநபர்கள் கொள்ளை முயற்சி <!– எஸ்பிஐ ஏடிஎம்-ல் சிசிடிவி கேமரா இணைப்பை துண்டித்துவிட்டு … –>

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம்-ல், மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் திருச்சி சாலையில் உள்ள இந்த ஏடிஎம்-மிற்கு நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பை துண்டித்து விட்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர். நீண்ட நேரமாகியும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் கொள்ளை கும்பல் தப்பிச் சென்று விட்டதாக கூறப்படும் நிலையில் தகவலறிந்து வந்த போலீசார், … Read more

‘இந்து தமிழ் திசை’, சங்கர் ஐஏஎஸ் அகாடமி இணைந்து நடத்திய ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சி; கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும்: அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி நிச்சயம் என அதிகாரிகள், பயிற்சியாளர் அறிவுரை

சென்னை: அரசு பணியில் சேர விரும்பும்இளைஞர்கள் கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்கு தயாராக வேண்டும். கடின உழைப்பு, அர்ப்பணிப்புடன் படித்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறலாம் என்று அரசுத்துறை அதிகாரிகள், பயிற்சியாளர்கள் ‘ஆளப் பிறந்தோம்’ வழிகாட்டு நிகழ்ச்சியில் அறிவுரை வழங்கியுள்ளனர். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’யுடன் இணைந்து ‘ஆளப் பிறந்தோம்’ எனும் வழிகாட்டு நிகழ்ச்சியை கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இணையவழியில் நடத்தியது. இதில் பங்கேற்ற கருத்தாளர்களின் உரை விவரம் வருமாறு: ஒடிசா … Read more