11ம் வகுப்பு மாணவியுடன் காதல்.. மாணவியின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் பரிதாப பலி..!

காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மூங்கில்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ்.  பெயிண்டரான இவர் அந்த பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறவே இருவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்கள் பழகி வந்தது பெண்ணின் குடும்பத்தாருக்கு தெரியவந்தது. இதனை அடுத்து, வெங்கடேஷை மாணவியின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி இரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷை மாணவியின் … Read more

திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் இளைஞர் ஒருவர் பலி; 50 பேர் காயம் <!– திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில்… –>

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூரில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் ஒருவர் உயிரிழந்தார். ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். முத்தாரம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இருநூற்றுக்கு மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற காளை முட்டியதில் கீழப்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்கிற இளைஞர் உயிரிழந்தார்.  Source link

’மக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?’ – அதிமுக வேட்பாளர்களை கலாய்த்த செல்லூர் ராஜு

மதுரை: “பொதுமக்கள் காலில் விழுந்து விழுந்து கால் வலிக்கிறதா?” என்று வேட்பாளர்களை பார்த்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு நையாண்டி செய்ததால் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்தது. மதுரை கே.புதூர் மாநகராட்சியில், 100 வேட்பாளர்களை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் கே.பழனிசாமி பிரச்சாரம் செய்தார். இந்த பொதுக் கூட்டத்திற்கு கே.பழனிசாமி வந்தபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு, கூட்டத்தினரைப் பார்த்து எழுந்து கரோஷம் போடும்படி கூறினார். அப்போது வேட்பாளர் பலர், அவர் நம்மைப் பார்த்து சொல்லவில்லையென்று மேடையில் அமர்ந்திருந்தனர். இதைப் … Read more

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை – அதிகபட்சமாக கோடியக்கரையில் 8 செ.மீ மழைப்பதிவு

டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. குமரிக்கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாங்குடி, திருநெய்பேர், குன்னியூர், நல்லூர், கூடூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்துவருவதால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையினால், பல்வேறு இடங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த கதிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் விவசாயிகள் … Read more

கங்கனாவின் ட்வீட்டால் சர்ச்சை.. இவரது இயக்கத்தில் நடிக்க விரும்பிய நடிகை.. மேலும் சினிமா செய்திகள் உள்ளே

உதயநிதி படத்தின் டீசர் வெளியீடு கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் அடுத்து இயக்கியுள்ள படம் நெஞ்சுக்கு நீதி. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்துள்ளார். கருப்பன் படத்தில் நடித்த தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரி, ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், இளவரசன், மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனுபவ் சின்ஹா இயக்கத்தில் தயாரான படம் ஆர்ட்டிகல் 15. இந்தப் படத்தின் ரீமேக் தான் நெஞ்சுக்கு நீதி. ஆர்ட்டிகல் 15 படத்தில் முன்னணி பாலிவுட் நடிகரா … Read more

வன்னியர் இடஒதுக்கீடு : விசாரணையை தள்ளிவைக்க வாய்ப்பே இல்லை – உச்சநீதிமன்றம் திட்டவட்டம்.!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு … Read more

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத அடையாளத்துடன் செல்லக் கூடாது – நடிகை குஷ்பு கருத்து.! <!– பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத அடையாளத்துடன் செல்லக் கூடாது … –>

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், ஹிஜாப் அணிவது, காவித்துண்டு அணிவது உள்ளிட்ட எந்த மத அடையாளத்துடனும் செல்லக் கூடாது என நடிகையும், பா.ஜ.க. நிர்வாகியுமான குஷ்பூ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், கல்வி நிலையங்களில் சாதி, மதம் பார்க்கக் கூடாது எனவும், அனைவரும் சமம் எனவும் கூறினார். மேலும், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிவதும், காவி துண்டு அணிவதும் தவறான செயல் எனவும் குஷ்பு கூறினார். Source … Read more

கோபாலபுரம் ஸ்டைலை பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்: அண்ணாமலை தாக்கு

விழுப்புரம்: ”கோபாலபுரம் ஸ்டைலை தற்போது நகராட்சி, பேரூராட்சிகளிலும் திமுகவினர் கொண்டுவந்துவிட்டனர்” என்று விழுப்புரம் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு தொடர்ந்து வாக்களித்தும், மக்களின் வாழ்க்கைத்தரத்தில் முன்னேற்றம் இல்லை. ஒவ்வொரு தேர்தலில் பெரிய கட்சி, பெரிய கட்சி என வாக்களித்து வாய்ப்பளித்தும் எவ்வித முன்னேற்றமும் … Read more

ராஜபாளையம்: வெளியூரில் இருந்து துக்க வீட்டுக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த சோக முடிவு

ராஜபாளையம் அருகே துக்க வீட்டுக்கு வெளியூரில் இருந்து வந்திருந்த பெண், கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள எஸ்.ராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்தம்மாள். தற்போது திருமணமாகி தனது கணவர் மாரிமுத்துவுடன் கரூரில் வசித்து வருகிறார். இவர், தனது சகோதரன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் தன்னுடைய உறவினர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அருகே … Read more