நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக மத்திய அரசு கூற காரணம் என்ன?

Kaunain Sheriff M  country’s Covid-19 situation ‘optimistic’ : ஓமிக்ரான் மாறுபாட்டால் தூண்டப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலையின் மத்தியில் இந்தியா உள்ளது. நாட்டில் உருவாகும் ஒட்டுமொத்த தொற்றுநோய் நிலைமை நம்பிக்கை அளிப்பதாக அரசாங்கம் வியாழக்கிழமை கூறியது. இருப்பினும், வைரஸால் ஏற்பட இருக்கும் தனித்துவமான சவால்கள் மற்றும் சில மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நிலைமையைக் கருத்தில் கொண்டு தொற்று முடிவுக்கு வந்துவிட்டது என்ற மனநிறைவுடன் இருப்ப்பதற்கு எதிராகவும் அது எச்சரிக்கை செய்தது. நல்ல செய்தி … Read more

#BREAKING : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அனைத்து நிறுவனங்களுக்கும் விடுமுறை-தமிழக அரசு.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலன்று ஊழியர்களின் ஊதியம் பிடிக்கக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வருகின்ற பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடை பெறுகிறது. இதில், ஆளுங்கட்சியான திமுக, எதிர்க்கட்சி அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, நாம் தமிழர், மக்கள் நீதி … Read more

பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. போலீசாரின் கால்களில் விழுந்து மன்றாடிய விவசாயி.. <!– பசுமாடுகளை ஏற்றி வந்த லாரியை மட்டும் அனுமதியுங்கள் ஐயா.. … –>

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதையில் கால்நடைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மட்டும் அனுமதிக்குமாறு விவசாயி ஒருவர் போலீசாரின் கால்களில் விழுந்து வேண்டுகோள் விடுத்தார். பண்ணாரி சோதனை சாவடி வழியாக நேற்று மாலை 6 மணியளவில் பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. இரவு நேர போக்குவரத்துத் தடை நேரம் தொடங்கியதாகக் கூறி அந்த லாரியை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது அங்கு வந்த விவசாயி ஒருவர், இரவு முழுவதும் கால்நடைகள் லாரியில் … Read more

அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீட்டை புறக்கணிப்பது சமூக அநீதி: கி.வீரமணி காட்டம்

சென்னை: “உயர் மருத்துவப் படிப்புத் தொடர்பான பிரச்சினையில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ள நிலையில், அவசர அவசரமாக உயர் மருத்துவப் படிப்பில் சேர்க்கைக்கான கலந்தாய்வை மேற்கொண்டது எப்படி?” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பில் (super speciality – DM/Mch) அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் … Read more

சரியான நேரத்திற்கு வருவதில்லை: அரசு பேருந்துகளை சிறைபிடித்த பொது மக்கள்

ஆவடியில் அரசு பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடியில் மாநகர போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கிருந்து சென்னையின் பிராட்வே, கோயம்பேடு, கிண்டி, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அருகில் உள்ள அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை மற்றும் பல்வேறு காரணங்களுக்காக பயணம் செய்கின்றனர். இந்தநிலையில் இன்று காலை திடீரென பேருந்து பணிமனை வாசலில் கூடிய பொதுமக்கள், பேருந்துகள் … Read more

கொரோனாவா.. அப்டினா என்ன…? பிரசாரத்தின்போது காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில்12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை  தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஜனவரி 26 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, வரும் 19-ம் தேதி சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் வாக்குப் பதிவு காலை 7 முதல் மாலை 5 மணி வரையிலும், கொரோனா பாதித்தவர்களுக்கு மாலை 5 மணி முதல் … Read more

#BREAKING || நாளை பிரச்சாரத்தை தொடங்கும் Dr.அன்புமணி இராமதாஸ்.! அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.!

நகர்ப்புற உள்ளாட்சித்  தேர்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து பா.ம.க. தலைமை நிலைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது,  “தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நாளை மறுநாள் … Read more

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடையை அறியாமல் இரவு முழுக்க வரிசைக் கட்டி நின்ற வாகனங்கள்.. <!– திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடைய… –>

தமிழகம் – கர்நாடகத்தை இணைக்கும் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அது தெரியாமல் அவ்வழியாக வந்த வாகனங்கள் இரவு முழுக்க வரிசை கட்டி நின்றன. வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக திம்பம் மலைப்பாதையில், இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையறியாமல், அங்கு வந்த வாகனங்கள், பண்ணாரி சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இதையடுத்து, காலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் திம்பம் மலைப்பாதை வழியாக அனைத்து வாகனங்களும் … Read more

கரோனாவால் மாறும் தைராய்டு அளவு: அடிக்கடி கண் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தல்

சென்னை: தைராய்டு ஹார்மோன் பிரச்சினை இருப்போர் அடிக்கடி தங்களின் கண்களைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என டாட்கர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் வலியுறுத்தினர். மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் அஸ்வின் அகர்வால் இது குறித்து கூறுகையில், “பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் தங்களின் கண்களை அவ்வப்போது சோதனை செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். அதேபோல், தைராய்டு பிரச்சினை உள்ளோரும் தங்களின் கண்களை பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பாதித்தவர்கள் இதை அசட்டை செய்தால் தீவிர கண் பார்வை … Read more