நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; கூட்டணி வைக்காமல், தனித்து களம் காணும் விஜய் மக்கள் இயக்கம்

Janardhan Koushik  Tamil Nadu: Thalapathi Vijay Makkal Iyakkam to not form alliance in civic polls: தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சுயேட்சையாக வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. முன்னதாக நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றமாக இருந்த இந்த அமைப்பு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 129 இடங்களைக் கைப்பற்றி குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை பதிவு செய்தது. விஜய் மக்கள் … Read more

தமிழகத்தில் நாளை முதல் லேசான மழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தில் நாளை முதல்  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  நாளை மற்றும் நாளை மறுநாள் : தென் தமிழக மாவட்டங்கள், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.  12.2.2022 … Read more

மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் ரோஜா <!– மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்க… –>

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இலவசமாக வழங்க உள்ளது. முன்னதாக நகரி சட்ட மன்ற உறுப்பினர் ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்மொழி பாடதிட்டத்திற்காக 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்திருந்தார். இதனையேற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத்தமிழ் பாட நூல்கள் வகுப்பிற்கு தலா 1000 பிரதிகள் வீதம் இலவசமாய் வழங்க … Read more

10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு இன்று தொடக்கம்: ஆங்கில பாடத் தேர்வு தேதி மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்குகிறது. கரோனா பரவல் காரணமாகதமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பள்ளிகள் முழுமையாக திறக்கப்படவில்லை. சில மாதங்களே வகுப்புகள் நடந்தன. இதனால், மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளுக்கு பதிலாக திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன்படி, திருப்புதல் தேர்வு இன்று (பிப்.9) தொடங்கி 16-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்காக தேர்வுத் துறை மூலம் மாநிலஅளவில் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்கப்பட … Read more

Rasi Palan 9th February 2022: இன்றைய ராசிபலன்

Rasi Palan 9th February 2022:  ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம். Rasi Palan 9th February 2022: இன்றைய ராசி பலன், பிப்ரவரி 9ம் தேதி 2022 ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)  … Read more

இன்றைய (09.2.2022) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்.!

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப மாதம் இருமுறை விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது. இம்முறை  மாற்றி அமைக்கப்பட்டு, தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. விலையை நிர்ணயம் செய்யும் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.  தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்ததால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு … Read more

விழுப்புரத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்த பறக்கும் படையினர்.! <!– விழுப்புரத்தில் ரூ.27 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் பறிமு… –>

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் கீழ்பெரும்பாக்கத்தில் இருசக்கர வாகனத்தில் எடுத்துவரப்பட்ட 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 4.14 கிலோ வெள்ளிப் பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 10 லட்சத்து 32 ஆயிரத்து 953 ரூபாய் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. … Read more

தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோயில்களை மட்டுமே இடிப்பதாக கூறி வழக்கு: ஆதாரங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள இந்து கோயில்களை மட்டும் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், ஆதாரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர். இதுதொடர்பாக இந்து முன்னணிமாநில செய்தித் தொடர்பாளரான சென்னை கொளத்தூரைச் சேர்ந்த டி.இளங்கோ, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு: தமிழகம் முழுவதும் 47,707 ஏக்கர்பரப்பில் நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தெரிவித்துள்ளது. இதில் 10,556 ஏக்கர் நிலங்கள் குடியிருப்பு பகுதிகளுக்காகவும், 1,500 ஏக்கர்நிலங்கள் வணிக நிறுவனங்களுக்காகவும், … Read more