பொய் சொல்ல கூச்சமில்லாதவர்கள் மத்தியில் உண்மையைப் பேச தயங்காதீர்- தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்வேகக் கடிதம்
சென்னை: “பொய் சொல்வதற்கே சிலர் கொஞ்சமும் கூச்சப்படாதபோது, உண்மையைப் பேசுவதற்கு நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள்?” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளை ஒட்டி திமுக தொண்டர்கள் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்: ”நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல். நல்லாட்சி வழங்கி வரும் திமுக அரசின் திட்டங்கள் உள்ளாட்சிவரை படிநிலைகளின் வழியே ஊடுருவிச் சென்று, ஒவ்வொரு ஊரிலும், அதில் … Read more