#நீட் || வரும் 8 ஆம் தேதி சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் – சபாநாயகர் அப்பாவு.! 

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து, வருகிற 8ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு முதல் மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வுகள் மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக கூறி, தமிழகத்தில் மட்டும் நீட் தேர்வு முறைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த அதிமுக ஆட்சியின்போது சட்ட மசோதா ஏற்றப்பட்டு, ஜனாதிபதி … Read more

வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல் <!– வேட்புமனு நிராகரிப்பு-வாக்குவாதம், சாலை மறியல் –>

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின்போது, பல்வேறு காரணங்களால் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், பல இடங்களில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு சாலை மறியல் உள்ளிட்டவை நடைபெற்றன.  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பமனுத் தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்த நிலையில், இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் நகராட்சி 23 வார்டில் அதிமுக நிர்வாகியான சரவணன் நதி என்பவரின் மனைவி தாரணி வேட்பு மனு தாக்கல் செய்தார். … Read more

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 74,416 பேர் வேட்புமனு தாக்கல்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இறுதி நாளான பிப்.4-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 74,416 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், 12,838 வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அட்டவணையினை 26.01.2022 அன்று தமிழ்நாடு மாநில தேர்தல் … Read more

தினமும் 1-2 கிராம்பு போதும்: வாயில் போட்டு மென்றால் சூப்பரா ஃபீல் பண்ணுவீங்க!

Health benefits of chewing cloves in tamil: நமது சமையல் அறையில் உள்ள எளிய உணவுப் பொருட்கள் அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அவற்றில் ஒன்று கிராம்பு. இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இப்போது பார்ப்போம். கிராம்புகள் நமது பெரும்பாலான உணவுகளில் சுவையூட்டிகளாக இடம்பெறுகின்றன. ஆனால் உண்மையில், கிராம்புகளை மெல்லுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. கிராம்பு சாப்பிடுவது ஆபத்தானது அல்ல. ஆனால் தினசரி எடுத்துக் கொள்ளும் அளவில் மிகுந்த கவனம் தேவை. உங்கள் உணவில் கிராம்புகளை … Read more

தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. வெளியான அதிர்ச்சி தகவல்.!

சென்னையில் உள்ள தமிழக முதல்வர்  ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு பேசிய மர்ம நபர் சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து சென்னை கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீடு போன்ற இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் இல்லை என்று … Read more

வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியல் வெளியீடு <!– வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் எந்தெந்த உண… –>

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தால் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளை எந்தெந்த உணவகங்களில் நிறுத்தலாம் என்ற பட்டியலை போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. தரமற்ற உணவுகளை தயாரிக்கும் உணவகங்களில் பேருந்துகளை நிறுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,சென்னையில் இருந்து கோவை, திருநெல்வேலி, செங்கோட்டை, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் பேருந்துகள் பிரசன்ன பவனில் நிற்கவும், சேலம், திண்டுக்கல், காரைக்குடி செல்லும் பேருந்துகள் வசந்த பவனில் நிற்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், பல்வேறு இடங்களில் இருந்து சென்னை வரும் … Read more

புதுச்சேரியில் 344 பேருக்கு கரோனா தொற்று உறுதி; ஒருவர் உயிரிழப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக இன்று 344 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்தார். நேற்று 431 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் உதயகுமார் இன்று (பிப். 5) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”புதுச்சேரி மாநிலத்தில் 2,254 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி –224, காரைக்கால்- 74, ஏனாம்- 39, மாஹே- 7 என மொத்தம் 344 (15.26 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று … Read more

மின்துறை சீர்திருத்தம்; நேரடி பலன் பரிமாற்றத்திற்கு தமிழகம் எதிர்ப்பு

Tamilnadu opposed direct benefit transfer subsidy: நேரடி பலன் பரிமாற்றம் (DBT) மூலம் நுகர்வோருக்கு மானியம் வழங்கப்படுவதற்கும், மின் விநியோகத்தை தனியார்மயமாக்குவதற்கும் தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. DBT மற்றும் தனியார்மயமாக்கல் ஆகியவை மின் துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக அதன் தொகுப்பின் ஒரு பகுதியாக மத்திய அரசு வகுத்துள்ள நிபந்தனைகளின் ஒரு பகுதியாகும். தொகுப்பைச் செயல்படுத்தும் மாநிலங்களுக்கு 2021-22 முதல் 2024-25 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அரை சதவீதம் வரை … Read more

கோவையில் கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருடிய இளைஞர்.. வைரலாகும் வீடியோ.!

கோவையில் கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது. கோவை மாவட்டம் காளன்பாளையம் பகுதியில் இணையதள சேவை மையம் மற்றும் எழுதுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் கடந்த 27ம் தேதி கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.  அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் கடையில் பொருட்களை வாங்குவது போல யதார்த்தமாக கடைக்கு சென்றுள்ளார். இதனை யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்த … Read more

அரசின் நீட் விலக்கு முடிவுக்கு அதிமுக ஆதரவு – ஓ.பி.எஸ் <!– அரசின் நீட் விலக்கு முடிவுக்கு அதிமுக ஆதரவு – ஓ.பி.எஸ் –>

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அதிமுக துணை நிற்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து, அதிமுகவின் நிலைப்பாடை ஏற்கனவே பேரவையில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். Source link