மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெறும் போப் பிரான்சிஸ் பதவி விலகுவாரா? – வாடிகன் விளக்கம்

வாடிகன்: போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், அவரின் உடல் நிலையில், தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளையில், அவர் பதவி விலகுவாரா என்ற கேள்வியும் எழுத் தொடங்கியுள்ளது. கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் (88 வயது), உடல் நலக்குறைவு காரணமாக 14-ம் தேதி ரோம் நகரில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவருக்கு நிமோனியா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி … Read more

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல்: 3 பஸ்களில் குண்டு வெடிப்பு

ஜெருசலேம், இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பணய கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேலில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. டெல் அவிவ் நகரின் பெட் யாம், ஹொலன் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 பஸ்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறின. பஸ்களில் நிரப்பப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் பஸ்கள் தீப்பற்றி எரிந்தன. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப்படையினர் … Read more

பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.0 ஆக பதிவு

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 3.51 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 22 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 34.59 டிகிரி வடக்கு அட்சரேகையிலும்,71.91 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை. முன்னதாக, கடந்த மாதம் … Read more

கனடாவில் விமானம் கவிழ்ந்து விபத்து: பயணிகளுக்கு தலா ரூ.26 லட்சம் இழப்பீடு

ஒட்டாவா, அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் கனடாவின் டொரண்டோவிற்கு புறப்பட்டது. சி.ஆர்.ஜே-900 என்ற அந்த விமானத்தில் 4 பணியாளர்கள் உள்பட 80 பயணிகள் பயணித்தனர். விமானம் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கிய போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானம் அப்படியே தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில், விமானத்திற்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில், 20 பயணிகள் காயம் அடைந்தனர். இதில் 3 பேர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக … Read more

எப்.பி.ஐ. இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த காஷ் படேல் நியமனம்: உறுதி செய்த செனட் சபை

வாஷிங்டன், அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார். இந்நிலையில் காஷ் படேல் அடுத்த எப்.பி.ஐ. இயக்குநராக நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதி செய்துள்ளது. இதன்படி 51-49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அவரது நியமனத்திற்கு ஜனநாயகக் கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். அமெரிக்க செனட் சபை இதுவரை டிரம்பின் அனைத்து அமைச்சரவை தேர்வுகளுக்கும் ஒப்புதல் … Read more

அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்பட்டால் வேட்டையாடப்படுவீர்கள்: FBI இயக்குநர் எச்சரிக்கை

வாஷிங்டன்: அமெரிக்கர்களுக்கு எதிராக செயல்படுபவர்கள் பூமியின் எந்த மூலையில் இருந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் என்று அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ-யின் (FBI) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள காஷ் படேல் எச்சரிக்கை விடுத்துள்ளார். எஃப்பிஐ-ன் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் நியமனம் வியாழக்கிழமை மேலவையால் உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து காஷ் படேல் இவ்வாறு தெரிவித்துள்ளார். எஃப்பிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டதற்கு அதிபர் ட்ரம்ப் மற்றும் அட்டர்னி ஜெனரலுக்க காஷ் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள … Read more

3ம் உலகப் போர் தூரத்தில் இல்லை, ஆனால்… டிரம்ப் பேச்சு – சர்வதேச அரசியலில் பரபரப்பு

Donald Trump: 3ம் உலகப் போர் வெகு தொலைவில் இல்லை எனவும், பைடன் ஆட்சி தொடர்ந்திருந்தால் இன்னும் பிரச்னை உக்கிரம் அடைந்திருக்கும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியிருந்தார்.

வரிவிதிப்பு எச்சரிக்கைக்குப் பின்பு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது: ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைக்கு எதிராக 150 சதவீத வரிவிதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் பிரிந்துவிட்டன என்று அதிபர் டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயன்றனர். அதனால் நான் பதவிக்கு வந்ததும், முதல் விஷயமாக டாலரை மாற்ற முயற்சிக்கும் எந்த ஒரு பிரிக்ஸ் நாட்டுக்கும் … Read more

குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு 150 மீட்டர் குறைந்தது

கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு எல்லையின் அளவு 150 மீட்டர் குறைந்திருத்தது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக், அண்டார்டிகா துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாக செய்திகள் வெளியாயின. இதே நிலை கடல் மட்டத்தில் இருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் காணப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நேபாளம் மற்றும் திபெத் இடையே அமைந்துள்ளது. இங்கு கடந்த 2023-ம் ஆண்டு … Read more

இந்திய திரைப்பட விழா இஸ்ரேலில் தொடங்கியது

சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் 8-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தொடக்க நாளான நேற்று கிரண் ராவ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “லபதா லேடீஸ்” திரைப்படம் திரையிடப்பட்டது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தவிர, டங்கல், ஜிந்தகி … Read more