எந்த முன்னேற்றமும் இல்லாத ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்த்தை; உயிர் பலி 352 ஆக அதிகரிப்பு

கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரைன் பிரதிநிதிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் … Read more

ரஷ்யாவை சுளுக்கெடுக்க.. உக்ரைனில் குவியும் ஆயுதங்கள்.. யார் யார் என்ன தர்றாங்க.. ஃபுல் லிஸ்ட்!

ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் ஆயுதங்களை அனுப்பி வருகின்றன. இதனால் உக்ரைன் ராணுவம் கூடுதல் பலத்துடன், ரஷ்யப் படைகளுடன் மோதி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவைப் பொறுத்தவரை சுயமாக உக்ரைனுடன் போரிட்டு வருகிறது. ஆனால் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என அமெரிக்க ஆதரவு படையினர் மொத்தமாக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுதவிர அமெரிக்க ஆதரவு ஊடகங்கள், ஐ.நா. சபை என சகல தரப்பிலும் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளனர். இதனால் ரஷ்யா … Read more

கீவ் நகரை நோக்கிய படையெடுப்பில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவுக்கு தொய்வு – பிரிட்டனின் ராணுவ உளவு பிரிவு <!– கீவ் நகரை நோக்கிய படையெடுப்பில் கடந்த 24 மணி நேரத்தில் ரஷ… –>

உக்ரைனின் கீவ் நகர் மீதான படையெடுப்பில் ரஷ்ய ராணுவம் கடந்த 24 மணி நேரத்தில் தொய்வை சந்தித்துள்ளதாக பிரிட்டனின் ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. ராணுவ தளவாடங்களை கீவ் நகரை நோக்கி எடுத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி ரஷ்ய படையினரால் முன்னோக்கி நகர்ந்து செல்ல முடியாமல் போய் இருக்கலாம் என பிரிட்டன் ராணுவ உளவு பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் பீரங்கிகள் மூலமும், ஏவுகணைகள் உள்ளிட்ட வான்வழி தாக்குதல் முறை மூலமாகவும் தாக்குலை தீவிரப்படுத்த ரஷ்யா … Read more

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் – விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.  இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்  நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில்,  ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:  உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். … Read more

உக்ரைன் அதிபரை கொல்ல 400 கூலிப்படையினர் தயார்| Dinamalar

லண்டன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை கொல்ல, 400 கூலிப்படையினரை ரஷ்யா அனுப்பியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய பீரங்கிப் படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்வை நெருங்கி விட்ட நிலையில், பிரிட்டனில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ் ஆப் லண்டன்’ பத்திரிகை ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :ரஷ்ய அதிபர் புடினின் நெருக்கமான நண்பர் யெவ்கெனி பிரிகோசின். இவர், ‘வாக்னர் குழுமம்’ என்ற பெயரில் தனி ராணுவத்தை நிர்வகித்து வருகிறார். இக்குழுமத்தைச் சேர்ந்த 2,000 … Read more

ரஷியாவுக்கு எதிராக கனடா பிரதமரின் அதிரடி அறிவிப்பு

கனடா, உக்ரைன் – ரஷியா இடையிலான போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே பொலாரசில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் ரஷியா, உக்ரைன் மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. ரஷியாவின் மோசமான தாக்குதலை கண்டு பல்வேறு நாடுகள் பலவித பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. பல நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டு வான்வெளியில் பறக்கக்கூடாது என தடை விதித்துள்ளன.  இந்த நிலையில், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய … Read more

உக்ரைனுக்கு சொந்தமான உலகின் பெரிய சரக்கு விமானத்தை தாக்கி அழித்த ரஷ்யா

கீவ்: உக்ரைனுக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய விமானத்தை ரஷ்ய ராணுவம் தாக்கி அழித்து உள்ளது. தொடர்ந்து 5-வது நாளாக நேற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் அதிரடி தாக்குதல் தொடர்ந்துநடைபெற்று வருகிறது. எல்லையோர நகரங்கள் மீது ரஷ்ய ராணுவம் தொடர்ந்து குண்டு மழைபொழிந்து வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் தலைநகர் கீவில் பல பகுதிகளில் குண்டுகள் வெடித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்ய படையினரின் குண்டுவீச்சால் உலகின் மிகப்பெரிய சரக்கு … Read more

பொதுமக்களை சுட்டுக் கொல்கிறதா ரஷ்யா ராணுவம்?.. பதற வைக்கும் புதுத் தகவல்!

இந்திய மாணவர் நவீன் எப்படி கொல்லப்பட்டார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர் குண்டு வீச்சில் உயிரிழந்ததாக மத்திய அரசு தகவல் தெரிவிக்கிறது. ஆனால் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. 2வது தகவல் உண்மையாக இருக்கும் என்றால், அப்பாவி பொதுமக்களை ரஷ்யப் படையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உக்ரைனின் 2வது பெரிய நகரமான கர்கீவ் நகரில் ரஷ்யப் படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். ஏவுகணை மூலம் தான் தாக்குதல் நடந்து … Read more

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர் விசா இல்லாமல் உக்ரைனுக்கு வரலாம் – அதிபர் செலன்ஸ்கி <!– ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டின… –>

ரஷ்யாவிற்கு எதிரான போரில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டினர் விசா இல்லாமல் உக்ரைனுக்கு வரலாம் என அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் 6ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், எந்த நாட்டினரும் தங்கள் படையினருடன் இணைந்து ரஷ்யாவிற்கு எதிராக சண்டையிடலாம் என செலன்ஸ்கி அறிவித்துள்ளார். மேலும், ராணுவத்துடன் இணைந்து போரிட விரும்புவோர் தங்களுக்கு ராணுவத்தில் அனுபவம் இருந்தால் அதனை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், தலைக்கவசம் மற்றும் உடற்கவசம் போன்றவற்றை சொந்தமாகவே … Read more

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- அதிபர் ஜெலன்ஸ்கி வலியுறுத்தல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகும் விண்ணப்பத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார். இது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் நிகி போரோ கூறும்போது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் உறுப்பினராவதற்கான விண்ணப்பத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டுள்ளார். இது வரலாற்று பூர்வ ஆவணம். இந்த ஆவணத்தில் பாராளுமன்ற சபாநாயகர் ஸ்டீபன்சுக்கு மற்றும் பிரதமர் டெனிஸ் ஷ்மிகல் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர் ஆவதற்கும் மற்றும் பாதுகாப்புக்காகவும் உக்ரைன் மிகப்பெரிய விலையை கொடுத்துள்ளது’ என்றார். இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி … Read more