ஆழ்துளை கிணற்றில் விழுந்த மொரோக்கோ சிறுவன் மரணம்| Dinamalar

இக்ரேன் : மொரோக்கோவில் கடந்த 1ம் தேதியன்று ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவனின் சடலம் நேற்று மீட்கப்பட்டது. வட ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவின் இக்ரேன் என்ற இடத்தில், ரயான் ஓராம் என்ற, 5 வயது சிறுவன் கடந்த 1ம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தான்.கிணற்றின் 100 அடி ஆழத்தில் சிக்கி இருந்த சிறுவனை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே 100 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டது. பின், … Read more

WInter Olympics: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்சில் தரம் குறைந்த உணவு? பகீர் புகார்

பெய்ஜிங்: பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் உணவு மோசமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ‘எனது எலும்புகள் வெளியே துருத்திக் கொண்டிருக்கின்றன, நான் ஒவ்வொரு நாளும் அழுகிறேன்’ என்று ரஷ்ய தடகள வீராங்கனை குற்றம் சாட்டுகிறார். தரம் குறைந்த உணவுக்காக, பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களை, ரஷ்ய தடகள வீராங்கனை கடுமையாக சாடியுள்ளார்.  விளையாட்டு தொடர்பான பணியாளர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களிடையே COVID-19 வழக்குகள் அதிகரித்துள்ள போதிலும், பெய்ஜிங்கில் நடந்து வரும் குளிர்கால ஒலிம்பிக் 2022 ஐ நடத்தும் சீனா ஏற்கனவே … Read more

ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை <!– ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் … –>

ஜம்மு காஷ்மீரில் போதைப் பொருள் கடத்த முயன்ற 3 பாகிஸ்தான் கடத்தல்காரர்களை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் 3 பேரையும் சுட்டுக்கொன்றதாகவும் அவர்களிடம் இருந்து 36 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஹெராயினின் மதிப்பு 180 கோடி ரூபாய் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதி வழியாக போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக கிடைத்த ரகசியத தகவலில் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றதாக … Read more

அல்-ஷபாப் பயங்கரவாதிகள் 7 பேரை வீழ்த்தியது சோமாலியா ராணுவம்

மொகடிஷு: சோமாலியாவின் தெற்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அல்-ஷபாப் அமைப்பு, பல்வேறு பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, பாதுகாப்பு படையினருக்கு கடும் சவாலாக விளங்குகின்றனர். மேலும், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துகின்றனர். அவர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் ராணுவம் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அவ்வகையில், தெற்கு மாநிலமான ஜூபாலேண்டில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதல்களில் அல்-ஷபாப் அமைப்பைச் சேர்ந்த 7 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ராணுவ கமாண்டர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 4 … Read more

கொரோனா ஊரடங்கில் விருந்து; ஒப்புக்கொண்ட அமைச்சர் ரிஷி

லண்டன்-கொரோனா ஊரடங்கின் போது நடந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்றதாக, அந்நாட்டின் நிதி அமைச்சர் ரிஷி சுனக் ஒப்புக் கொண்டுள்ளார். கொரோனா தொற்று பரவத்துவங்கிய போது, ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் 2020ல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. குற்றச்சாட்டுஅப்போது ஜூன் மாதம் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் வந்தது. இதற்காக லண்டனில் உள்ள எண்: 10, டவுனிங் தெரு என்ற முகவரியில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ அரசு இல்லத்தில்,பிறந்த … Read more

US vs Russia: ரஷ்யா – உக்ரைன் சர்ச்சை! போரைத் தொடங்க படைகளை அனுப்புகிறதா அமெரிக்கா?

மாஸ்கோவுடனான உக்ரைன் மோதல்  வலுத்து வரும் நிலையில், ஜெர்மனி மற்றும் கிழக்கு ஐரோப்பாவிற்கு 3,000 கூடுதல் வீரர்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஆனால்,  ரஷ்யாவுடன் போரைத் தொடங்குவதற்காக இந்த துருப்புக்களை அனுப்பவில்லை என்று அமெரிக்கா ஞாயிற்றுக்கிழமை விளக்கம் அளித்துள்ளது. “உக்ரேனில் போரைத் தொடங்கவோ அல்லது ரஷ்யாவுடன் போரிடவோ அமெரிக்கா படைகளை அனுப்பவில்லை என்பதை அமெரிக்க அதிபர் பல மாதங்களாக தெளிவாகக் கூறி வருகிறார்” என்று அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் ஃபாக்ஸ் நியூஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். … Read more

லதா மங்கேஷ்கரின் இனிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்; ஹமீத் கர்சாய்

காபூல், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய … Read more

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் – ரஷ்யாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வில்மிங்டன்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ தாக்குதல் திட்டம் குறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் தெரிவித்துள்ளதாவது: ரஷ்யா உக்ரைனை எந்த நாளும் ஆக்கிரமிக்கக் கூடும். உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பால் அதிக மனித உயிர் இழப்பு ஏற்படும்.  ஆனால் எங்கள் தயாரிப்புகள் மற்றும் எங்கள் பதிலின் அடிப்படையில், ரஷ்யாவிற்கும் அதிக ராணுவ இழப்பு ஏற்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.  உக்ரைன் தலைநகர் கெய்வை விரைவாகக் கைப்பற்றுவதற்கு ரஷ்யா … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு: சிறந்த பாடகர்களில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது – இம்ரான்கான் இரங்கல்

இஸ்லாமாபாத், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிச்சைக்குயில்  என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு- வங்கதேச பிரதமர் இரங்கல்

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த இந்தியாவின் இசைக் குயில் லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று காலமானார்.  அவருக்கு வயது 92.  நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை பெற்ற லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  லதா மங்கேஷ்கரின் … Read more