சோமாலியாவில் கண்ணிவெடி தாக்குதல்- 10 பேர் உயிரிழப்பு
மொகடிஷு: சோமாலியாவின் தெற்கு பகுதியில் உள்ள துறைமுக நகரமான கிஸ்மாயோ நகருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையில் கிளர்ச்சியாளர்களால் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியது. கண்ணி வெடித்ததால் வேன் முற்றிலும் சிதைந்தது. இதில், வேனில் இருந்த 5 பெண்கள், 4 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர். 3 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலை அல்-ஷபாப் கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்தியிருக்கலாம் என தெரிகிறது. கண்ணிவெடி வெடித்த சமயத்தில், அரசுப் … Read more