வரிவிதிப்பு எச்சரிக்கைக்குப் பின்பு ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பு பிரிந்துவிட்டது: ட்ரம்ப் பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்க டாலரை குறைத்து மதிப்பிடும் நடவடிக்கைக்கு எதிராக 150 சதவீத வரிவிதிக்கப்படும் என்ற எச்சரிக்கைக்குப் பிறகு இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் பிரிந்துவிட்டன என்று அதிபர் டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டொனால்ட் ட்ரம்ப், “பிரிக்ஸ் நாடுகள் நமது டாலரை அழிக்க முயன்றனர். அவர்கள் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை உருவாக்க முயன்றனர். அதனால் நான் பதவிக்கு வந்ததும், முதல் விஷயமாக டாலரை மாற்ற முயற்சிக்கும் எந்த ஒரு பிரிக்ஸ் நாட்டுக்கும் … Read more

குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு 150 மீட்டர் குறைந்தது

கடந்த குளிர்காலத்தில் பனிப்பொழிவு குறைவு காரணமாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் பனி உறைவு எல்லையின் அளவு 150 மீட்டர் குறைந்திருத்தது செயற்கைகோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக ஆர்க்டிக், அண்டார்டிகா துருவ பகுதிகளில் பனிப்பாறைகள் உருகி வருவதாக செய்திகள் வெளியாயின. இதே நிலை கடல் மட்டத்தில் இருந்து 8,849 மீட்டர் உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்திலும் காணப்படுகிறது. எவரெஸ்ட் சிகரத்தின் உச்சி நேபாளம் மற்றும் திபெத் இடையே அமைந்துள்ளது. இங்கு கடந்த 2023-ம் ஆண்டு … Read more

இந்திய திரைப்பட விழா இஸ்ரேலில் தொடங்கியது

சர்வதேச திரைப்பட தயாரிப்பு மையமாக இந்தியாவை உருவெடுக்கச் செய்ய மத்திய அரசு தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் வேளையில், இந்திய திரைப்பட திருவிழா இஸ்ரேலில் நேற்று தொடங்கியுள்ளது. மார்ச் 8-ம்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. தொடக்க நாளான நேற்று கிரண் ராவ் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவான “லபதா லேடீஸ்” திரைப்படம் திரையிடப்பட்டது. இது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதைத் தவிர, டங்கல், ஜிந்தகி … Read more

“இஸ்ரேல் படையினரை வாபஸ் பெறவில்லை என்றால்…” – ஹமாஸ் எச்சரிக்கை

இஸ்ரேல் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட 2 குழந்தைகள், அவர்களது தாய் உட்பட 4 பேரின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் நேற்று ஒப்படைத்தனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற இஸ்ரேலியர்களை ஹமாஸ் தீவிரவாதிகள் ஒவ்வொரு வாரமும் மூன்று, நான்கு பேராக விடுவித்து வந்தனர். பதிலுக்கு நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்து வந்தது. இதுவரை 24 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் தீவிரவாதிகள் உயிருடன் … Read more

உடலுறவு செய்தே உலக சாதனை செய்த… 2 ஆபாச நடிகைகளும் இப்போ கர்ப்பம் – தந்தை யார்?

World Bizarre News: செக்ஸ் மாரத்தான் என்ற பெயரில் மணிக்கணக்கில் பல ஆண்களுடன் உடலுறவு மேற்கொண்டு அதனை சாதனையாக கூறிய போனி ப்ளூ, லில்லி ப்ளிப்ஸ் ஆகிய இரு ஆபாச நடிகைகளும் தற்போது கர்ப்பமாகி உள்ளதாக அறிவித்துள்ளனர்.

டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை இந்தியாவில் தொடங்குவது அமெரிக்காவுக்கு அநீதி: டிரம்ப்

வாஷிங்டன், அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா இந்தியாவில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், அதிக இறக்குமதி வரி உள்ளிட்ட காரணங்களால் டெஸ்லா தயக்கம் காட்டி வருகிறது. 40 ஆயிரம் டாலர்களுக்கு மேல் விலை கொண்ட அதிநவீன சொகுசு கார்களுக்கான அடிப்படை இறக்குமதி வரியை 110%-லிருந்து 70 சதவீதமாக இந்திய அரசு குறைத்துள்ளது. இந்த சூழலில், கடந்த வாரம் அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடியை, டெஸ்லா நிறுவன … Read more

இஸ்ரேலிய பிணைக்கைதிகள் 4 பேரின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது ஹமாஸ்

காசா: காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தாய் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உட்பட 4 இஸ்ரேலிய பிணைக்கைதிகளின் உடல்களை செஞ்சிலுவை சங்கத்தினரிடம் ஹமாஸ் இன்று ஒப்படைத்தது. போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்படுவது இதுவே முதல்முறை. இறந்த பிணைக்கைதிகளின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகளை செஞ்சிலுவை சங்கத்தினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர். அவர்களின் உடல்களை இஸ்ரேல் பெற்றுக்கொண்டதாக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் உறுதிபடுத்தியுள்ளது. இறந்தவர்களில், பிபாஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஷிரி பிபாஸ் (32) அவரது … Read more

சுனிதா வில்லியம்ஸ் விவகாரத்தில் அரசியல் – எலான் மஸ்க்

வாஷிங்டன், அமெரிக்காவில் தனியார் ஊடக நிறுவன நேர்காணலில் அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் உடன் எலான் மஸ்க் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர். முந்தைய ஜனாதிபதி ஜோ பைடன் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அவர்களை பூமிக்கு அழைத்து வரும் பணியை ஸ்பேஸ் எக்ஸ் துரிதமாக மேற்கொண்டது. இருந்தாலும் அது பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது. சுனிதா … Read more

அமெரிக்காவில் இருந்து பனாமா வந்த இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரகம் தகவல்

பனாமா சிட்டி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பனாமா, நிகராகுவா, கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்காவில் இருந்து பனாமா வந்துள்ள இந்தியர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பனாமா அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக … Read more

சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி – டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். உக்ரைனில் 2019ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.இதைக் குறிப்பிடும் வகையில், டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுடன் சேர்ந்து … Read more