அமெரிக்காவில் இருந்து பனாமா வந்த இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தூதரகம் தகவல்

பனாமா சிட்டி: அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு பனாமா வந்துள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருப்பதாக பனாமாவுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பனாமா, நிகராகுவா, கோஸ்டா ரிகா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அமெரிக்காவில் இருந்து பனாமா வந்துள்ள இந்தியர்கள் அனைத்து அத்தியாவசிய வசதிகளையும் கொண்ட ஒரு ஹோட்டலில் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் தங்க வைக்கப்பட்டிருப்பதாக பனாமா அதிகாரிகள் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர். தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக … Read more

சர்வாதிகாரியாக செயல்படுகிறார் ஜெலன்ஸ்கி – டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன், உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். உக்ரைனில் 2019ல் நடந்த தேர்தலில் வென்று ஜெலன்ஸ்கி அதிபரானார். கடந்தாண்டுடன் அவருடைய பதவிக்காலம் முடிவடைந்தது. உக்ரைன் சட்டங்களின்படி, நாட்டில் போர் நடக்கும் நேரத்தில் தேர்தல் நடத்தத் தேவையில்லை.இதைக் குறிப்பிடும் வகையில், டொனால்டு டிரம்ப் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுடன் சேர்ந்து … Read more

பைடன் நிதி கொடுத்தது இந்தியாவில் யாரை ஆட்சியில் அமர்த்த? – மீண்டும் ட்ரம்ப் கேள்வி

மியாமி: “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது. அமெரிக்காவை பொறுத்தவரையில் உலக நாடுகளில் அதிகம் வரி வசூலிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரதமர் நரேந்திர மோடி மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால், வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க நாம் ஏன் 21 மில்லியன் டாலரை வழங்க வேண்டும்?” என ட்ரம்ப் பேசியிருந்தது இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அதே கருத்தை … Read more

கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் – பிலிப்பைன்ஸ்

மணிலா. பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில், பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகத்தின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் அதிகம் பணம் ஈட்டுவதற்காக வேண்டுமென்றே தண்ணீரைத் தேங்கவைத்து கொசுக்களை உற்பத்தி செய்யும் அபாயமும் ஏற்படும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் … Read more

பனாமாவில் இந்தியர்கள் உட்பட 300 சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைத்துள்ள அமெரிக்கா!

பனாமா சிட்டி: மத்திய அமெரிக்காவின் தென் பகுதியில் அமைந்துள்ளது பனாமா தேசம். அங்கு தங்கள் நாட்டுக்குள் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட சுமார் 300 பேரை (பெரும்பாலும் ஆசிய கண்டத்தை சேர்ந்தவர்கள்) விடுதி ஒன்றில் அமெரிக்கா அடைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் செய்தி நிறுவனம் ஒன்று உறுதி செய்துள்ளது. பனாமாவில் அடைக்கப்பட்டுள்ள 300 பேரில் இந்தியர்கள் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவை சேர்ந்தவர்களும் … Read more

பாலஸ்தீன மக்களை காசாவில் இருந்து வெளியேற்றும் முயற்சியை நிராகரித்தது ஐக்கிய அரபு அமீரகம்

அபுதாபி, அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தின் செனட் உறுப்பினராக இருந்த மார்கோ ரூபியோ கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தால் வெளியுறவு மந்திரியாக நியமனம் செய்யப்பட்டார். இவர் அமெரிக்க வெளியுறவு கொள்கையை வழிநடத்துவதில் முக்கிய நபராக இருப்பார் என கூறப்பட்டது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிரதேசங்களில் அமைதியை கொண்டு வருவதற்கான உலகளாவிய முயற்சியை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகிப்பார் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட காசா … Read more

எலான் மஸ்க் இந்தியாவில் தொழிற்சாலை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு அநீதி: ட்ரம்ப்

வாஷிங்டன்: எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனம் சார்பில் இந்தியாவில் கார் தொழிற்சாலையை அமைத்தால் அது அமெரிக்காவுக்கு அநீதியானது என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, பிரதமர் மோடியை தொழில​திபர் எலான் மஸ்க் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து, அமெரிக்​கா​வின் முன்னணி கார் தயாரிப்பு நிறு​வனமான டெஸ்லா இந்தியா​வில் கால் பதிக்க ஆர்வமாக உள்ளதாகவும், … Read more

“விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியதன் பின்னணியில் அரசியல்!” – எலான் மஸ்க்

நியூயார்க்: அரசியல் காரணமாக சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் எட்டு மாதங்களாக சிக்கி உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் கூறியுள்ளார். தனியார் ஊடக நிறுவன நேர்காணலில் அந்த நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடன் மஸ்க் பங்கேற்றபோது இதை தெரிவித்துள்ளார். “அரசியல் காரணங்களால் அமெரிக்காவின் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் என இருவரும் சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கி உள்ளனர். முந்தைய அதிபர் ஜோ பைடன் … Read more

சட்டவிரோதமாக குடியேற நினைத்தால் இதுதான் நிலைமை… புதிய வீடியோவை வெளியிட்டு எச்சரித்த அமெரிக்கா

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்ற பின்னர், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று அறிவித்தார். அதன்படி சட்டவிரோதமாக தங்கி இருந்த பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களை வெளியேற்றும் பணி நடந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றி வசித்து வந்த இந்தியர்கள் பலர் ‘சி-17’ ரக ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 4-ம் தேதி காலை டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 5-ம் தேதி மதியம் … Read more

“யாரும் என்னுடன் வாதிட முடியாது” – வரிவிதிப்பில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க ட்ரம்ப் மறுப்பு

வாஷிங்டன்: பரஸ்பர அளவில் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரத்தில் யாரும் என்னுடன் வாதிட முடியாது என கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு கூட்டாக அளித்த பேட்டி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பானது. அந்த நேர்காணலில், பிரதமர் மோடி உடனான சமீபத்திய சந்திப்பு குறித்தும், பரஸ்பர அளவிலான வரி விதிப்பு முறையில் இருந்து இந்தியாவுக்கு … Read more