“இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்?” – ட்ரம்ப் கேள்வி

வாஷிங்டன்: “இந்தியாவுக்கு நாம் ஏன் 21 மில்லியன் டாலர்களை வழங்க வேண்டும்? அவர்கள் வசம் அதிக அளவில் பண பலம் உள்ளது.” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். அண்மையில் எலான் மஸ்க் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்திறன் துறை (DOGE) வெளிநாடுகளுக்கு அளித்து வரும் நிதி உதவியில் சுமார் 723 மில்லியன் டாலர்களை குறைத்துள்ளதாக அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு வாக்காளர்களின் சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் நிதியும் ரத்து செய்யப்பட்டுள்ளது. … Read more

இஸ்ரேலிய பணய கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்

காசா முனை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே ஓராண்டாக நீடித்து வந்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டது. பணய கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பாலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்தின் முதற்கட்டமாக 6 வாரங்களில் (42 நாட்கள்) 33 பணய கைதிகளை விடுதலை செய்ய ஹமாஸ் ஒப்புக்கொண்டது. 33 பணய … Read more

‘கைவிலங்கு, கால்களில் சங்கிலி’ – நாடு கடத்தப்படும் சட்டவிரோத குடியேறிகளின் வீடியோவை பகிர்ந்த அமெரிக்கா

வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களை அந்த தேசம் நாடு கடத்தி வருகிறது. அப்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் சிறப்பு விமானம் மூலம் அவர்களது தாய் நாட்டுக்கே திருப்பி அனுப்பி வருகிறது அமெரிக்கா. இந்த பயணத்தின் போது அவர்களது கையில் கைவிலங்கும், காலில் சங்கிலி பூட்டியும் அமெரிக்கா நாடு கடத்தி வருகிறது. இதுவரை 332 இந்தியர்கள் அங்கிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களது கைகளில் கைவிலங்கு மற்றும் கால்களில் சங்கிலி பூட்டியது விமர்சனத்துக்கு … Read more

‘ஜெலன்ஸ்கி உடன் புதின் பேசத் தயார்’ – அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைக்குப் பின் ரஷ்யா தகவல்

மாஸ்கோ: தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர சவுதி அரேபியாவில் அமெரிக்க, ரஷ்ய உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்ட நிலையில், ரஷ்யா இவ்வாறு தெரிவித்துள்ளது. ரஷ்யா அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “தேவைப்பட்டால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக … Read more

அமெரிக்கா நாடு கடத்தும் இந்தியர்களுக்கு ‘பாலம்’ ஆக செயல்பட கோஸ்டா ரிகா சம்மதம் – பின்னணி என்ன?

அமெரிக்காவால் நாடு கடத்தப்படும் இந்தியர்கள் உள்ளிட்டோர் தங்கள் சொந்த நாடுகளுக்குச் செல்வதற்கு பாலமாக செயல்பட கோஸ்டா ரிகா நாடு ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமெரிக்க நாடான கோஸ்டா ரிகாவின் அதிபர் ரோட்ரிகோ சாவ்ஸ் ரோபிள்ஸின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘இந்தியா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த, அமெரிக்காவில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை திருப்பி அனுப்புவதற்கு ஒரு ‘பாலமாக’ செயல்பட கோஸ்டா ரிகா ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி, 200 புலம்பெயர்ந்தோர் கொண்ட முதல் குழு நாளை (புதன்கிழமை) … Read more

உக்ரைன் விவகாரம்: அமெரிக்க பிரதிநிதிகளுடன் ரஷிய மந்திரி இன்று பேச்சுவார்த்தை

மாஸ்கோ ரஷியாவின் வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி செர்கேய் லாவ்ரோவ் அமெரிக்க அதிகாரிகளுடன் சவுதி அரேபியாவின் ரியாத்தில் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இதற்காக அவர் இன்று அதிகாலை ரியாத் சென்றடைந்தார் . உக்ரைன் விவகாரம் இந்த பேச்சுவார்த்தையில் முக்கிய விவாதமாக இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, ரஷிய அதிபர் புதினும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் தொலைபேசி வழியாக உரையாடினர். அப்போது உக்ரைனில் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர ரஷியாவுக்கு அமெரிக்க தரப்பு வலியுறுத்தியதைத் தொடர்ந்து, இதனை புதின் … Read more

போப் பிரான்சிஸ் சுவாச குழாயில் தீவிர தொற்று; தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடிவு

ரோம், கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து வரும் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த வாரம் உடல்நலம் பாதிக்கப்பட்டு ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், போப்புக்கு சுவாச தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அவருக்கு தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றது. இதனால், அவர் மருத்துவமனையில் தொடர்ந்து தங்கி சிகிச்சை பெறுவார். இதுபற்றி வாடிகன் செய்தி தொடர்பாளர் மேத்யூ புரூனி கூறும்போது, வைரசுகள், … Read more

வங்காள தேசத்திற்கு திரும்பி வருவேன்: ஷேக் ஹசீனா

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு, மாணவர்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இந்தியாவில் தங்கி உள்ள ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என வங்காளதேசஅரசு கோரிக்கை விடுத்து இருந்தது. எனினும் இது தொடர்பாக இந்தியா எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளிளில் காணொலி வாயிலாக அவர் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், வங்காளதேசத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஷேக் ஹசீனா … Read more

உக்ரைன் அமைதிக்காக… டிரம்ப், ஜெலன்ஸ்கியுடன் பேச்சு – பிரான்ஸ் அதிபர் மேக்ரான்

பாரீஸ், ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த போரானது மூன்று ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. போரில் பொதுமக்கள், வீரர்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். தொடக்கத்தில் கீவ், கார்கிவ், டொனெட்ஸ்க் உள்ளிட்ட பல நகரங்களை ரஷியா கைப்பற்றியது. எனினும், அவற்றை உக்ரைன் பதிலடி கொடுத்து பின்னர் மீட்டது. உக்ரைனுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் ஆதரவு கிடைத்து வருகின்றது. இதற்கேற்ப, அந்நாடுகளும் ராணுவம் மற்றும் … Read more

தைவான் ஜலசந்தியில் கனடா போர்க்கப்பல்: கண்டனம் தெரிவித்த சீனா

தைபே நகரம், தைவான் ஜலசந்தியில் கனடாவின் போர்க்கப்பல் பயணித்ததை நேற்று சீன இராணுவம் கண்டித்தது. அமெரிக்க கடற்படை கப்பல்கள் இதேபோன்ற பயணத்தை மேற்கொண்ட சில நாட்களுக்குப் பிறகு, சீனாவின் வான் மற்றும் கடற்படையினர் அந்த கப்பலை கண்காணித்து எச்சரித்ததாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்க கடற்படையும், எப்போதாவது கனடா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களும், சர்வதேச நீர்வழியாகக் கருதும் இந்த ஜலசந்தியை மாதத்திற்கு ஒரு முறை கடந்து செல்கின்றன. தைவானும் இதை ஒரு சர்வதேச நீர்வழியாகக் … Read more